சென்னை,நவ.24- நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக புகார் தெரி வித்தும், நெசவு தொழில் வளர்ச்சி க்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் அறிக்கை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கைத்தறி -துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் வெளி யிட்டுள்ள மறுப்பறிக்கையின் சுருக்கம் வருமாறு: நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித் துறையினால் எவ்வித அறிவிப்போ அரசாணையோ வெளியிடப்பட வில்லை. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கடித ந.க.எண்.26821/ஆர்-1/2024 நாள் 06.11.2024–இன்படி அனைத்து மாநகராட்சி மற்றும் நக ராட்சிகளுக்கு மின்சார வாரியத்திட மிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பட்டியலுடன் ஒப்பீடு செய்யப்பட்டு வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என கண்டறிய மாநகராட்சி கள் மற்றும் மண்டல நகராட்சி வாரி யாக ஆய்வு செய்து கேட்பு உயர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற் கொள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் (சென்னை தவிர) மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் ஊராட்சி ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
இதுவரை சதுர அடிக்கான தொழில்வரி ஏதும் நிர்ணயம் செய்யப் படவில்லை. எனவே, குடிசைத் தொழில் போல வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பான தாகும். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களு க்குத் தேவையான நூல்கள் மானி யத்துடன் குறைந்த விலையில் வழங் கப்பட்டு வருகிறது. இவ்வகையில் 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.54.42 கோடி மானியமாக விடுவிக்கப் பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் நூல் விலை நிர்ணயக் குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு நூல்விலை கட்டுப் பாட்டில் வைக்கப்படுகிறது. எனவே, நூல் விலை உயர்வால் நெசவாளர் கள் சிரமப்பட்டு வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்றதாகும்.
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள்
வெளி மாநிலங்களிலிருந்து போலியாக தரமற்ற சேலைகள் தயா ரிக்கப்பட்டு குறைந்த விலையில் விற் பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது உண்மைக்கு புறம்பான தாகும். கிராமப்புறத்தில் அவாஸ் பிளஸ் (Awaas Plus) பட்டியலில் இடம் பெறாத பயனாளிகளில் “கலைஞரின் கனவு இல்லம்” என்ற திட்டத்தின்கீழ் 2392 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவ தற்கு ஏதுவாக இவ்வரசு தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இவற்றைத் தவிர, கிராமப்புற பகு திகளில் சிதிலமடைந்த நிலையில் உள்ள நெசவாளர் வீடுகளை புனர மைக்க ஏதுவாக 151 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு ஊரக வளர்ச்சித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, நெசவாளர்களுக்கு எந்த திட்டத்தின் கீழும் இவ்வரசால் வீடுகள் கட்டித் தரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது உண் மைக்கு புறம்பானதாகும். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரின் பல்வேறு தேதியிட்ட கைத்தறி துறை தொடர்பான அறிக்கைகளுக்கு நான் தக்க பதிலடி கொடுத்திருந்தும், அதையெல்லாம் கவனத்தில் கொள் ளாமல், வாய்க்கு வந்தவாறு செவி வழிச் செய்திகளைக் கேட்டு, உரிய தரவுகள் ஏதுமின்றி, உண்மைக்கு புறம்பான கருத்துகளை சுய லாபம் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தரம் தாழ்ந்த அரசியலில், கண்ணிய மற்ற முறையில், மலிவாக ஈடுபடு வதை நான் வன்மையாக கண்டிப்பது டன், அவர் இம்மாதிரியான நடவ டிக்கைகளை இனிமேலாவது கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.