2 வாரத்திற்கு பள்ளிக்கு புத்தகங்கள் கொண்டு வரத் தேவையில்லை!
சமூகப் பிரச்சனைகள் குறித்து மட்டும் உரையாடல்
திருவனந்தபுரம், மே 17- கேரளத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது ஜனநாயக முன் னணி அரசு அறிவித்துள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக் கப்பட உள்ளன. அந்தவகையில் கேரளத்தில் 2025-26 கல்வியாண்டுக்கு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தபின், முதல் 2 வாரங்க ளுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங் கள் கொண்டுவரத் தேவையில்லை என்று கூறியுள்ளது. அந்த 2 வாரங்களுக்கு மாணவர் களுக்கு சமூகப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ள தாகவும் அதுதொடர்பான பாடங்களை ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், சுகாதார பிரச்ச னைகள், சமூக ஊடகங்களின் பயன் பாடு, சட்ட விதிகள், குற்றச் செயல்கள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக காவல்துறை, குழந்தை கள் உரிமைகள் ஆணையம், தேசிய சுகாதார இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்த வர்கள் கல்வித் துறைக்கு இதுதொடர் பான வழிமுறைகளை வழங்கியுள்ள தாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.