சென்னை, ஜன.10- ஒமைக்ரான் பாதித்தவர்க ளுக்கு மூச்சுதிணறல், நுரையீரல் பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கொரோனா தொற்று அதி கரித்து வருவது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதா வது:- ஒமைக்ரான் அனைத்து மாநிலங்களிலும் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று உறுதியாகுபவர்களில் 85 விழுக்காடு பேருக்கு ஒமை க்ரான் பாதிப்பு இருக்கிறது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 250-க்கு மேற்பட்டவர்களும், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் 200-க்கு மேற்பட்டவர்களும் ஒமைக்ரான் வார்டுகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பாதிக்க ப்பட்டவர்களை நேரில் பார்த்து வந்தேன். யாருக்கும் 2-வது அலையில் டெல்டா வைரஸ் ஏற்ப டுத்தியது போல் உயிருக்கு ஆப த்தான பாதிப்பு ஏற்படவில்லை. குறிப்பாக யாருக்கும், மூச்சுதி ணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்பட வில்லை. இதனால் அனைவ ருக்கும் சாதாரண சிகிச்சை முறையே தேவைப்படுகிறது. இது வரை சிகிச்சை பெற்று 150-க்கும் மேற்பட்டவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார் கள். எனவே டெல்டா வைரஸ் போல் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. தொற்று ஏற்படு வதை தவிர்க்க பொது மக்கள் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்தாலே போதும். மக்கள் ஒத்துழைத்தால் ஒமைக்ரான் விரைவில் கட்டுக்குள் வரும். 100 வயதான கம்யூனிஸ்டு தலைவர் என். சங்கரய்யா ஒமைக்ரான் தொற்றால் ராஜீவ்காந்தி அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெறு கிறார். அவரை நேரில் பார்த்தேன். நலமுடன் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.