tamilnadu

img

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்டமுடியாது

சென்னை,பிப்.22- தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேர வையில் வியாழனன்று (பிப்.22) கேள்வி நேரம் முடிந்ததும், காவிரி மற்றும் மேகதாது பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனி சாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அமைச்சர் துரை முருகன் பதில் அளித்து பேசினார். அப்போது, மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது. நீர்பங்கீட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மேலாண்மை ஆணை யம் அமைக்கப்பட்டது. ஆணையத்திற்கு நீண்ட காலமாக தலைவர் நிய மிக்கப்படாமல் இருந்ததால் பிரச்சனை ஏதும் வரவில்லை. தற்போது தலைவர் நியமிக்கப்பட்டு கடந்த பிப்.1 ஆம் தேதி கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் மேக தாது குறித்து விவாதிக்கக்  கூடாது என தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் வலியுறுத் தினர். தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. மேகதாது விவகாரத் தில் கர்நாடகா மட்டுமே ஆணையத்தில் பேசிக் கொண்டிருக்கிறது. கேரள அரசும், ஒன்றிய அரசின் பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேகதாது குறித்து விவாதம் மட்டுமே நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறவில்லை. அன்றைய கூட்டத்தில் எடுத்த  முடிவுகள் வேறு, அதன் அறிக்கையில் இருந்த தகவல்கள் வேறு. மேக தாது தொடர்பாக ஒன்றிய  பொதுப்பணித் துறைக்கு  அளித்த பரிந்துரைக்கு  எதிர்ப்பு தெரிவித்துள் ளோம். மேகதாது விவகா ரத்தில் நான்கு வழக்கு கள் ஏற்கெனவே நிலுவை யில் உள்ளன. கேரளா, புதுச்சேரி மாநில அரசு களின் பிரதிநிதிகளும் நமக்கு  ஆதரவாக கருத்து தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட மேகதாதுவில் எடுத்து வைக்க முடியாது”என்றார். பாஜகவாக இருந்தா லும், காங்கிரசாக இருந்தா லும் மேகதாதுவை வைத்து அரசியல் செய்கின்றனர். மேகதாது அணை குறித்து  யாரும் அஞ்சத் தேவை யில்லை. மேகதாது அணை கட்டுவதை தமிழ்நாட்டை சேர்ந்த எந்த கட்சியும் அனு மதிக்காது. மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ள அதே அக்கறை எங்களுக்கும் உள்ளது என்று அவர் கூறி னார்.