கிருஷ்ணகிரி,நவ.14- வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 14 அன்று செய்தியாளர்களி டம் கூறியதாவது: தேர்தல் வரும்போது கூட்டணி என்று நான் கூறியது பாஜக அல்லாத கட்சிகளையே குறிக்கும். அதிமுகவை பொறுத்தவரை வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை ஏற்கெனவே எடுத்துவிட்டோம், அதில் மாற்றுக் கருத்து இல்லை. நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால், இளைஞர்களின் வாக்குகள் பாதிக்கப்படுமா என்ற கற்பனையான கேள்விக்கு எப்படி பதிலளிக்க முடியும்? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுடன், அதிமுக பலமான தொண்டர்களைக் கொண்ட கட்சி. அதற்கு எவ்வாறு பாதிப்பு வரும். இவ்வாறு அவர் கூறினார்.