tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி திருப்பூரில் ஒரே நாளில் ரூ. 7.25 லட்சம் வசூல்!

திருப்பூர், டிச. 30 - திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் வீடு, வீடாக மக்களைச் சந்தித்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வளர்ச்சி  நிதி வசூலிப்பது வழக்கம். அந்த வகை யில், 2025-ஆம் ஆண்டுக்கான நிதி வசூல் இயக்கம் டிசம்பர் 29 துவங்கி ஒரு மாதத் திற்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி கட்சியின் மாவட்டச் செயலா ளர் செ. முத்துக் கண்ணன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் தலைமையில் ஞாயிற்றுக் கிழமையன்று 102 கிளைகளில் இடைக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் நிதி வசூல் இயக்கம் நடைபெற்றது. திருப்பூர் மாநகரம், உடுமலை, தாராபுரம், வெள்ளகோவில், காங்கேயம், பல்லடம் மற்றும் திருமுருகன்பூண்டி ஆகிய நகரங்கள், பேரூராட்சிகள், கிராமப்புறங்கள் மற்றும் உடுமலை மலைப்பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிதி வசூல் இயக்கம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் ரூ. 7 லட்சத்து 25 ஆயிரத்து 690 வசூல் ஆனது. அனைத்து பகுதிகளிலும் மக்கள் இன்முகத்துடன் வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தாராளமாக நிதியை வழங்கினர்.  திருப்பூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் வீடுகளில் மக்களைச் சந்தித்து நிதி  வசூலிப்பது என்ற இலக்கின் அடிப்படை யில் தொடர்ந்து ஜனவரி மாதம் நிதி வசூல் இயக்கத்தை நடத்தி வெற்றிகரமாக இலக்கை நிறைவேற்றுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய் திருப்பதாக திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.

தீக்கதிருக்கு  ஆண்டுச் சந்தாக்கள்

குறிப்பாக தாராபுரம் கமிட்டி சின்னக்காம்பாளையம் பகுதியில் ரூ. 20 ஆயிரம் இலக்கிற்கு ரூ. 24 ஆயிரம் வசூல் செய்து, தீக்கதிருக்கு ஆண்டு சந்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட கணியூர் கிளை ரூ. 25 ஆயிரம் கோட்டாவிற்கு ரூ. 32 ஆயிரத்து 300 வசூல் செய்து, தீக்கதிருக்கு 3 ஆண்டு சந்தாவும் கிளை பெயரில் செலுத்தியுள்ளது.