tamilnadu

காஷ்மீரில் என்ஐஏ திடீர் சோதனை

ஸ்ரீநகர், மார்ச் 9- மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஜம்மு-காஷ்மீரை பிரித்து சிதைத்துள்ளது. தற்போது  யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட இங்கு பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர்  போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரின் ஸ்ரீநகர் மார்க்கெட் பகுதியில் பயங்கர வாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கு தல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொது மக்கள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டான் உள்பட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) மார்ச் 9 அன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.