tamilnadu

புதிய டி.ஜி.பி. தேர்வு  8 பேர் பட்டியல் ஒன்றிய  அரசுக்கு அனுப்பி வைப்பு

புதிய டி.ஜி.பி. தேர்வு  8 பேர் பட்டியல் ஒன்றிய  அரசுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான பட்டியல், நீண்ட இழுபறிக்குப் பின் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை தலைவர் டி.ஜி.பி. சங்கர் ஜிவால்,  இம்மாதம் ஓய்வு பெறுகிறார். இதனால், புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்கு முன் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஆனால், இப்பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. புதிய டி.ஜி.பி. தேர்வு பட்டியலில் உள்ள மூத்த ஐ.பி.எஸ்.  அதிகாரியின் ஆதரவாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையும் ‘புதிய டி.ஜி.பி. நியம னத்தில் குளறுபடி ஏற்பட்டால் தலையிடும் நிலை ஏற்படும்’  என எச்சரித்தது. அதேபோல், தன்னையும் புதிய டி.ஜி.பி.  தேர்வு பட்டியலில் இணைக்க வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பிரமோத் குமார் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  ஒருவழியாக, தற்போது மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 11 பேர் அடங்கிய பட்டியல், டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில் மூன்று பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, எட்டு பேர்  அடங்கிய பட்டியல் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அதில் மூவரை இறுதி செய்து, மாநில அரசுக்கு  பட்டியல் திருப்பி அனுப்பப்படும். அதிலிருந்து ஒருவர் டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்படுவார். இறுதிப் பட்டியலில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் சீமா அகர்வால், ராஜிவ்குமார், சந்தீப் ராய் ரத்தோட் இடம்  பெறுவர் என தமிழக காவல்துறை வட்டாரத்தில் எதிர்பார்க்கப் படுகிறது.