tamilnadu

img

கடத்தல் மாஃபியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க கேரள காவல்துறையில் புதிய படைப்பிரிவு

திருவனந்தபுரம், டிச.28- கேரளத்தில் போதைப்பொருள் கடத்தல் போன்ற திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்க கேரள காவல்துறையில் புதிய படைப் பிரிவு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு தங்கக் கடத்தல், போதைப் பொருள்-நில மாஃபியா மற்றும் நிதிக் குற்றங்களை விசாரிக்கும். ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் மாநில நோடல் அதி காரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டங் களில் ஒரு மூத்த அதிகாரி இந்த படைப்பிரிவில் நியமிக்கப்படுவார். இத்தகைய குற்றங்கள் பெரும்பாலும் கொலைக்கு வழிவகுக்கும். பணம் சம்பாதிப்ப தற்காக கூலிப்படையினர் இத்தகைய வழி களை நாடுகின்றனர். வகுப்பு வாத-பயங்கர வாதகுழுக்க ளின் முக்கிய வருவாய் ஆதாரமாக தங்க கடத்தல்உள்ளது. இவற்றை கண்டறிந்து தடுக்க வேண்டும் என்பதே புதிய முடிவு. இந்த தனிப் படையினருக்கு சைபர் (இணைய குற்றத்தடுப்பு)  உதவியும் கிடைக்கும். இதுபோன்ற குற்றக் கும்பல்களின் பட்டியல்தயாரிக்கப்படும். அவர்களின் தொலைபேசி தொடர்புகளை காவல்துறையினர் கண்காணிப்பார்கள். கேரள காவல்துறையின் ‘ஒழுங்கமைக்கப் பட்ட குற்றப்பிரிவு’ (ஆர்கனைஸ்டு கிரைம்  ஸ்குவாடு) குறித்த உத்தரவு செவ்வா யன்று வெளியிடப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.