tamilnadu

நீட் தேர்ச்சி விகிதம் குறைந்தது

நீட் தேர்ச்சி விகிதம் குறைந்தது

புதுதில்லி, ஜூன் 14- நாடு முழுவதும், கடந்த மே 4 அன்று நடை பெற்ற இளநிலை மருத்துவப் படிப்பு களுக்கான நீட் தேர்வின் முடிவுகள் சனிக்  கிழமையன்று வெளியாகின.  இதில், அகில இந்திய அளவில் ராஜஸ்  தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமா ரும், மாணவிகளில் தில்லியைச் சேர்ந்த அவிகா அகர்வாலும் முதலிடம் பிடித்துள்ளனர்.  முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் இடம் பிடித்துள்ள னர். 27-ஆவது இடத்தை சூரிய நாராய ணன், 50-ஆவது இடத்தை அபிநித் நாக ராஜன், 61-ஆவது இடத்தை புகழேந்தி, 63-ஆவது இடத்தை ஹிருதிக் விஜயராஜா, 78-ஆவது இடத்தை ராகேஷ், 88-ஆவது இடத்தை பிரஜன் ஸ்ரீவாரி ஆகியோர் பெற்  றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தேர்வை எழுதிய 22  லட்சத்து 9,318 பேர்களில்- 5 லட்சத்து 14 ஆயி ரத்து 63 மாணவர்கள், 7 லட்சத்து 22 ஆயி ரத்து 462 மாணவியர் என மொத்தம் 12.36 லட்சம் (55.96 சதவிகிதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.45 சதவிகிதம் குறைவாகும்.  தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 715 பேர்  தேர்வு எழுதியதில் 76 ஆயிரத்து 181 (56.13  சதவிகிதம்) மாணவர்கள் தேர்ச்சி பெற் றுள்ளனர். இது கடந்தாண்டு தேர்ச்சி விகி தத்தை விட 2.34 சதவிகிதம் குறைவாகும். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 67 மாண வர்கள் முழு மதிப்பெண்களை (720)எடுத்த னர். இந்தாண்டு ஒருவர் கூட முழு மதிப் பெண் எடுக்கவில்லை. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை  ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வரு வது குறிப்பிடத்தக்கது.