tamilnadu

img

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தர்மபுரி மாணவிக்கு ஜாமீன்

மதுரை:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தர்மபுரி மாணவி பிரியங்கவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.தர்மபுரி மாணவி பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்,அதில் “ நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கடந்த அக்டோபர் 12- ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளோம். 2019-ஆம் ஆண்டு நீட் தேர்வில் 397 மதிப்பெண்கள் பெற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள எனக்கும் எனது தாயாருக்கும் ஜாமீன் வழங்கக் கோரி கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி தேனி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது, 
இந்த நிலையில் எனக்கும்  எனது தாயாரின் உடல்நலம் கருதி அவருக்கும் ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டுமென  மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு வியாழனன்று  நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மாணவியின் சகோதரி மாற்றுத்திறனாளி என்பதால் மாணவிக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கிய நீதிபதி. அவரது தாயார் மைனாவதியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். விசாரணையில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுவதாக நீதிபதி கூறினார்.

;