tamilnadu

img

“இயற்கையின் குழந்தைகளும் அசுர கணங்களும்” “மான்ஸ்டர்” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

குழந்தைகளின் உலகம் மாயக் கனவுகள், கற்பனைகளால் ஆனது. யதார்த்த உலகின் நியதிகள், நியாயங்களுக்கு அப்பாற்பட்டது. கானகத்தில் சிங்கத்தின் குணமும் செயலும், மானின்  குணமும் செயலும் இயற்கையானதாகவே பார்க்கப்படு கிறது.சாந்தம், வன்செயல் என்ற நியாயங்கள் கிடையாது. மனித சமூக நியதி, நியாயங்களை குழந்தைகள் மெதுவாகவே உள்வாங்கித் தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள் என்ற நுட்பமான உளவியலை இசை யொழுங்குடன் விளக்கும் 2023 இல் வெளி வந்துள்ள  ஜப்பானியத் திரைப்படம்”மான்ஸ்டர்”. பசுமை கொஞ்சும் மலையடிவாரத்தில், அழகிய பிரம்மாண்ட ஏரியைக் கொண்டது அந்த ஜப்பானிய நக ரம். தலைவரை இழந்த ஷௌரி (Single mother), ஐந்தாவது கிரேடு படிக்கும் மகன் மினோட்டாவின் நல்லெதிர்காலத்துக்காக தனித்து வாழ்பவள்.

மினோட்டாவின் பள்ளி தோழன் யோரி. தாயில்லாத வன். குடிகாரத் தகப்பன் பராமரிப்பில் வளர்பவன். பெண்மையின் நளின பாவத்தோடு (Effeminate) இருப்பதால் சக மாணவர்களால் கேலிக்கு உள்ளாக்  கப்படுபவன்.யோரியை பன்றி மூளை உள்ள மான்ஸ்டர் என குடிகாரத் தந்தை அடிக்கடி பயமுறுத்தி யதால்,அதனை அப்படியே நம்புகிறான்.தந்தை இப்பயத்தை பயன்படுத்தி யோரியை தவறாகவும் பயன்படுத்துகிறான்.     வகுப்புத் தோழன் யோரி மீது, மினோட்டா அன்பு ணர்வும் நட்புறவும் கொள்கிறான்.இது வெளியில் தெரிந்தால் சகலரும் கேலி செய்வார்கள்.இதனால் பள்ளியில் இருவரும் பேசிக்கொள்வதில்லை. ஊருக்கு  வெளியே கைவிடப்பட்ட ரயில் பெட்டியில் இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து பேசுவர். யோரிக்கு பன்றி மூளை இருப்பதாக மினோட்டாவும் நம்புகிறான்.தங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட இனப் பெருக்க (Selective breeding)உயிரினமாக கருது கிறார்கள்.மேலும் இப்பிரபஞ்சம் விரைவில் ஊதிப்  பெருகுவதை நிறுத்தி(Big Crunch)பழைய நிலைக்கு திரும்பும்.அப்போது இவர்கள் மறுபிறவி(Reborn)எடுக்க இருப்பதாகவும் கற்பனையில் நம்பிக்கொண்டி ருக்கிறார்கள். இதனால் இவர்களின் செயல்பாடுகளில் வித்தி யாசம் தெரிகிறது.இது மினோட்டாவின் தாய்க்கு ஒருவித  பயத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சமயம் கேலிக்குள்ளாகும் யோரியை, நேரடி யாக காக்க முடியாத மினோட்டா,கேலி செய்பவர்களின்  புத்தகப்பைகளை வெளியே வீசி அசுரனாகிறான். வகுப்பாசிரியர் ஹோரி தடுக்கிறார். அப்போது அவரது  கை, அவனது மூக்கில் பட்டு இரத்தம் வருகிறது.இதே போல் வேறொரு நிகழ்வில், தடுத்த ஹோரியின் கை தெரி யாமல் பட்டு, மினோட்டாவின் காது கிழிகிறது. மினோட்டா,யோரி அன்புணர்வை மறைக்க, மினோட்டாவை காயப்படுத்தியவர் ஆசிரியர் ஹோரி யென,இருவரும் சேர்ந்து பொய் பழி சுமத்துகிறார்கள்.இதனை நம்பும் மினோட்டாவின் தாய், ஆசிரியர் மீது  பள்ளியில் புகாரளிக்கிறாள்.

பள்ளியின் முதல்வர்,காரை பின்னோக்கி எடுக்கை யில் பின்நின்ற பேரனை கவனிக்காமல், காரேற்றி கொன்றவள். இக்கொலைப் பழியை தன் கணவனை ஏற்கச் சொல்லி, இவள் தப்பிக்கிறாள். இதனால் குற்ற உணர்வோடு வாழ்கிறாள்.  இவரே, பள்ளியின் நலன் கருதி, பெற்றோரின் தொடர் நெருக்கடியால், தவறேதும் செய்யாத ஆசிரியர்  ஹோரியை பணிநீக்கம் செய்கிறார். இச்சூழலில் நகரை  டைஃபூன் புயல் தாக்குகிறது. தங்களது சந்தோ சத்திற்காக பிறர் மீது பொய் பழியிட்ட மினோட்டா, யோரி மற்றும் பள்ளி முதல்வர் ஆகிய மூவரும் குற்ற  உணர்விலிருந்து மீண்டனரா? மினோட்டா, யோரியின் மறுபிறப்பு கைவசமானதா? Hostess Bar அமைந்துள்ள கட்டிடம் தீக்கிரையாகி றது.முதலில் மினோட்டாவின் தாய்,பின்னர் ஆசிரியர் ஹோரி,அதன்பின் மினோட்டா ஆகிய மூவரின் பார்வையில் திரைக்கதை தனித்தனியாக தீப்பிடித்த கட்டடத்திலிருந்து நகன்று, டைபூன் புயல் வரை சென்று மையம் கொள்கிறது.அதாவது ஒரே நிகழ்ச்சி கோர்வைகள்,மூவரின் வெவ்வேறு கோணத்தில் தனித்துவமாகவும், சிறப்பாகவும்  அலசப்படுகிறது. 2023 கேன்ஸ் திரைப்பட விழாக்குழு,சிறந்த திரைக் கதைக்காக இப்படத்திற்கு விருது வழங்கியுள்ளதே இதற்குச் சான்று. மினோட்டா, பள்ளி முதல்வரிடம், தான் ஆசிரியர்  மீது அபாண்டமாக பழி சுமத்தியதையும், முதல்வர்  தனது தவறையும் பரஸ்பரம் உணர்ந்து வருந்து கிறார்கள். இசைக்கருவிகள் உள்ள அறையில் இரு வரும் மனம் விட்டு பேச, டிரம்பட் கருவியை இசைக்க  மினோட்டாவுக்கு கற்றுக் கொடுக்கிறாள். அப்போது  மினோட்டா முதல்வரிடம், “நான் ஒருவரை நேசித்தேன். அதை வெளியே சொல்ல முடியவில்லை. அதனால்தான்  ஆசிரியர் மீது பொய் பழி சொன்னேன்” என்பான். அதற்கு  முதல்வர், “எதை வெளியே சொல்ல முடியவில் லையோ, அதனை இந்த டிரம்பட்டில் ஊதிச் சொல்” என்பாள்.

அப்போது இருவரும் தங்களது மனதில் புதைத்து வைத்திருந்த ரகசியத்தை இசையாக வாசிப்பர். இவர்களது இசை சத்தம், பக்கத்து அறையில் அடி பட்ட மகனை காணவந்த மினோட்டாவின் தாய்க்கும், அதேவேளையில் மொட்டைமாடியில் செய்யாத தவறுக்கு தண்டனை பெற்றவரும், மினோட்டாவின் மன உலகை  ஆசிரியராக சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலைக்கு முயற்சிக்கும் ஹோரிக்கும் கேட்கிறது. ஹோரியின் தற்கொலை மனதை இந்த இசை மாற்றுகிறது. மினோட்டாவை பற்றி அதீத கவலை கொண்டு அழு கின்ற தாயின் மனதை இதே இசை இதமாக்குகிறது.இதே வேளையில் சொல்ல முடியாத விஷயத்தை டிரம்பட்டில் வெளிப்படுத்திய இருவரது மனமும் குதூகலத்தின் உச்சத்திற்குச் செல்கிறது.இது படத்தின் கவித்துவ மான காட்சியாகும். இக்காட்சி மூவரின் பார்வையில் வெவ்வேறு தளத்தில் சொல்லப்பட்டிருக்கும். இசையே பார்வை யாளர்களுக்கு இம்மூன்று காட்சிகளையும் இணைக்கி றது. இத்தனித்துவக் காட்சி மொழியை வடிவ மைத்த இயக்குநர் ஹிரஹாஷீ ஹொரீடா, இசைய மைப்பாளரும், படத் தொகுப்பாளருமான ரூஷி ஷாஹ மோட்டா சிறப்புக்குரியவர்கள். கதை வழி நெடுகிலும் வரும் பியானோவின் தென்றல் வருடுமிசை, டிரம்பட்டின் கருத்திசை அழகு. முதல்வர்,தனது சந்தோசத்திற்காக பொய் சொன்ன மினோட்டாவிடம்,

“ஒரு சிலர் அனுபவிப்பது மட்டும்  சந்தோசம் அல்ல.அது முட்டாள்தனம். எல்லோரும் அனுபவிப்பதே சந்தோசம்” எனக் கூறுவது அர்த்த மான வசனம். நடித்த அனைவரும் சிறப்பான  நடிப்பைத் தந்துள்ளனர்.குறிப்பாக மினோட்டாவின் தாயாக நடித்த ஷாகுரா ஆன்டோ. சிறு சலசலப்பான ஏரியின் தோற்றம்,மதகு வழியாக  வெளியேறும் நீர்,சிறு வெள்ளை இலைகள் உதிர்ந்து  தரையில் தோன்றும் வெண்ணிறமான காட்சி போன்ற  அடுக்கிக்கொண்டே சொல்லக்கூடிய அற்புதமான ஒளிப்பதிவு. மினோட்டாவின் அம்மாவுக்கு உண்மை புலப்படும்  சமயத்தில், ஏரியின் மதகு திறந்து வழியும் நீர் காட்டப்  படும். இதொரு படிமக்காட்சி. ஆசிரியர்கள் அறையில், “இப்பல்லாம் மாண வர்களை சமாளித்துடலாம்.ஆனால் பெற்றோர்களை சமாளிக்க முடியலே. இவர்கள் தான் மான்ஸ்டராக நம்மைக் கொடுமைப் படுத்துகிறார்கள்” எனப் பேசிக்  கொள்கிற வசனத்தின்படி, சிறுவர்கள் மன உலகை கவனிக்காத, உண்மையை வெளிப்படுத்த முடியாத எல்லோருமே மான்ஸ்டர், என்பதனையே இப்படம் அழகுணர்வோடு சொல்கிறது. பிரைம் அமேசானில் தமிழ் டப்பிங்கில் உள்ளது.