சென்னை, மே 2 - அஞ்சல் ஊழியர் நலன் மற்றும் பொதுத் துறை நிறுவனத்தை பாதுகாக்கத் தொடர் ச்சியாக போராடி வரும் தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் (என்எப்பிஇ) மற்றும் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (ஏஐபிஇயு) 3ஆம் பிரிவு அங்கீகாரத் தை ஒன்றிய அரசு ரத்து செய்ததைக் கண்டி த்து தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு ஊழியர்களும் அஞ்சல், பிஎஸ்என்எல் ஊழியர்களும் செவ்வாயன்று (மே 2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேள னம், பிஎஸ்என்எல்இயூ, அஞ்சல் ஊழியர் சங்க அறைகூவலுக்கு இணங்க நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசைக் கண்டித்து ஊழியர்கள் கறுப்புப் பட்டை அணிந்து முழக்கமிட்டனர். தமிழ கம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் ஏராளமான அஞ்சல் ஊழியர்களும் பிஎஸ்என்எல் ஊழியர்களும் பெருந்திர ளாக கலந்து கொண்டனர்.
பிஎஸ்என்எல்இயு எதிர்ப்பு
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் 3 ஆம் பிரிவு (என்எப்பிஇ-பி 3) மற்றும் ஏஐபிஇயு குருப்- சி அங்கீ காரத்தை ஒன்றிய பாஜக அரசு ரத்து செய்துள்ளதற்கு பிஎஸ்என்எல் எம்ப்ளா யிஸ் யூனியன் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் பி. அபிமன்யு விடுத்துள்ள அறிக்கையில், தில்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டம் முழுக்க முழுக்க அரசியல் சார்பற்றது. விவ சாயத்தையும் நாட்டு மக்களின் உணவுப்பாதுகாப்பையும் பாதுகாக்கப் போராடிய அவர்களுக்கு அஞ்சல் ஊழி யர் சங்கம் அளித்த நன்கொடை அரசியல் இயக்கத்திற்கு அளிக்கப்பட்ட நன்கொ டையாக கருதுவது கடும் கண்டனத்திற்கு உரியது என்று சுட்டிக் காட்டியுள்ளார். அதேபோல் சிஐடியுவுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது என்பது உலக தொழிலாளர் சம்மேளனத்திற்கான என்எப்பிஇ பி3யின் பங்களிப்பு ஆகும். இதைத் தனிப்பட்ட ஒருசங்கம் நேரடியாக அனுப்ப இயலாது.
சிஐடியு போன்ற பெரிய தொழிற்சங்கத்தின் வாயிலாகத் தான் உலக தொழிலாளர் சம்மேளனத் திற்கு அனுப்பமுடியும் என்று ஒன்றிய அரசிடம் விளக்கமளித்த பிறகும் என்எப்பிஇ பி3 அங்கீகாரத்தை ரத்து செய்திருப்பது வியப்பளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்எப்பிஇ பி3 சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.4935 நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய தபால் துறை கூறி யுள்ள குற்றச்சாட்டும் தவறானது. கார ணம் அந்த தொகை அக்கட்சிக்கு வழங்கப் பட்ட நன்கொடை அல்ல. அந்த கட்சி நடத்தும் பதிப்பகத்திலிருந்து வாங்கப் பட்ட புத்தகங்களுக்கு வழங்கப்பட்ட நன் கொடையாகும். எனவே சொத்தையான காரணங்களை வைத்து அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளதை பிஎஸ்என்எல்இயு வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஒன்றிய அரசு தனது தொழிலாளர் விரோத போக்கை மாற்றிக் கொண்டு மீண்டும் அங்கீகாரத்தை என் எப்பிஇ மற்றும் ஏஐபிஇயு ஆகிய சங்கங் களுக்கு வழங்க வேண்டும் என்றும் அபிமன்யு வலியுறுத்தியுள்ளார்.