tamilnadu

img

‘கவர்மெண்ட் பிசினஸ்’ என்றால் என்ன?

140 கோடி மக்களைக் கொண்ட நாட்டில்  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை ஒன்றிய அரசு எதற்குக் கூட்டுகிறது என மக்களுக்குத் தெரியவில்லை. கேள்வி நேரம் அல்லாத கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.  நேர்மையாக வந்தவர்கள் திறந்த புத்தகமாக இருப்பார்கள். நேர்மையற்றவர்கள் நாட்டு மக்களுக்கு பயப்படுவார்கள். நாடாளுமன்ற சட்ட விதிகளை மதிக்காமல் ஒரு கூட்டத் தொடர் கூட்டப்படவுள்ளது,  நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்த அழைப்பாணையில் “கவர்மெண்ட் பிசினஸ்” என குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை மோடி ஆட்சியில் “கவர்மெண்ட் பிசினஸ்” என்பது  பொதுத்துறையை தனியாருக்கு விற்பது, அதானியை பலப்படுத்துவதே ஆகும்.  நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதற்கு எனத் தெரியாமலேயே நாடாளுமன்றத்திற்குள் உறுப்பினர்கள் செல்லப்போகிறோம். மதுரையில் சு.வெங்கடேசன் எம்.பி., அளித்த பேட்டியிலிருந்து...