tamilnadu

img

தேசிய அறிவியல் தினம்

இந்திய அறிவியல் மேதை சர் சி.வி.ராமன் தனது அறிவியல் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்த தினம் பிப்ரவரி 28. அவர் ஒளியின் சிதறலை கண்டுபிடித்ததினால், இது ‘ராமன் விளைவு’என்று அழைக்கப்படுகிறது. அதன் முக்கியத்துவம் கருதி, இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை 1986 -லிருந்து பிப்ரவரி 28ஐதேசிய அறிவியல் தினமாக அறிவித்தது. இந்த நாள் இந்தியா முழுவதும்கல்விக்கூடங்களிலும் அறிவியலாளர்களாலும் கொண்டாடப்படுகிறது.சர் சி.வி.ராமன் பிறந்த நாள் – 7-11-1888. அவரது நினைவு நாள்.. 21-11-1970. அறிவியல் வளர்ச்சி மனித குலத்தின் மேம்பாட்டிற்குப் பேருதவி செய்துள்ளது. தனி மனித வாழ்க்கையின் சிரமங்களை குறைத்துள்ளது. மனித சமுதாயத்தைப் படுகொலை செய்யவும் இந்த அறிவியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவை பற்றிய விழிப்புணர்வை மனிதர்கள் பெறும்போது அறிவியலை மனித சமூக மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற உணர்வு ஊற்றெடுக்கும். சிக்கிமுக்கி கல்லைத் தட்டி நெருப்பைக் கண்டு  பிடித்தது தான் மனி தனின்-முதலாவது அறிவியல் கண்டு பிடிப்பு எனலாம். அன்றுதொட்டு இயற்கையை வெல்ல மனிதன் கையில் கிடைத்த மகத்தான கருவி இந்த அறிவி யல் 18-ஆம் நூற் றாண்டின் மத்தியில் ஏற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தின. ஜார்ஜ் ஸ்டீவன்சன் நீராவி எந்திரத்தை உருவாக்கினார்.

அச்சு எந்திரத்தை காக்ஸ்டன் உருவாக்கினார். ரைட் சகோதரர்கள் ஆகாய விமானத்தை உருவாக்கினார். மின்சாரத்தை எடிசன் கண்டுபிடித்து பெரும் புரட்சியை உண்டாக்கினார். விவசாய முன்னேற்றத்திற்கான கருவிகள் ஒரு புறம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித நோய்களை குணமாக்கும் மருத்துவ அறிவியல் ஒரு புறம் வளர்ச்சியுற்றது. அணுசக்தி கண்டுபிடிக்கப்பட்டது. வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி, செயற்கைக் கோள் எனத் தகவல் தொழில்நுட்பபுரட்சி ஏற்பட்டது. உலகமே இன்றைய மாபெரும் அறிவியல் வளர்ச்சியால் ஒரு கிராமமாகச்சுருங்கிவிட்டது. இதனைத் திரும்பிப்பார்ப்பதும், மேன்மேலும் வளர்ப்பதும் ஆக்கபூர்வமானவளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று மக்களை சிந்திக்க வைப்பதும் இத்தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். புதிய புதியகண்டுபிடிப்புகள் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதுமட்டுமே அறிவியல் தினத்தின் நோக்கமன்று. ஏனெனில் அனுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதும் ஜப்பானில், நாகசாகி- ஹிரோஷிமா நகரங்கள்மீது அமெரிக்காவின் அணுகுண்டுகள் வீசப்பட்டன. 2 கோடி மக்கள் மாண்ட சம்பவம் மனித குலம் அறிவியல் வளர்ச்சிப் பாதையில், ஒரு கரும்புள்ளியாகும்!

அதே அமெரிக்கா, அபாயகரமான நாபாம் – குண்டுகளை, ரசாயன ஆயுதங்களைக் கண்டுபிடித்து வியட்நாமில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது நாசகரச் செயல் ஆகும். குளோனிங்முறையில்  ஆட்டை உருவாக்கிய விஞ்ஞானிகள் செயற்கை முறையில் மனிதனை உருவாக்கும் முயற்சி எதிர்கால மனிதவாழ்க்கையில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்திவிடும் எனும் அச்சமும் நிலவத்தான் செய்கிறது. அறிவியல் வளர்ச்சியின் ஒவ்வோர் அம்சமும் மனித மேம்பாட்டை மையப்படுத்தியே இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு துணை புரிவதுதான் இந்த தேசிய அறிவியல் தினமாகும்.

ஏ.சி.எஸ்.மணி