சென்னை, மார்ச்.21- 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாநக ராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு சென்னை மாநக ராட்சி இலவசமாக சானிடரி நாப்கின் வழங்க வுள்ளது. மாநகராட்சிப் பள்ளிகளில் மாதவிடாய் கால உடல் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க ‘கண்ணியம்’ எனப் பெயரிடப் பட்டுள்ள இந்த முன்னெடுப்புக்காக நிர்பயா நிதி யிலிருந்து ரூ.4.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாணவிக்கும் மாதந்தோறும் 10 நாப்கின்கள் வழங்கப்படும். மாநகராட்சிப் பள்ளிகளில் 6 முதல் 12 வரை மொத்தம் 25,474 மாணவிகள் படிக்கின்றனர். இந்த முன்னெடுப்பின் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடையவுள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘‘மாதந்தோறும் ஆசிரியர்களிடமிருந்து 10 நாப்கின்களை மாண விகள் பெற்றுக்கொள்ளலாம். உடனடியாகத் தேவைப்படுவோருக்காக கழிப்பறைகளிலேயே கூடுதல் நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும். அவசரப் பயன்பாட்டுக்கு பள்ளி கழிப்பறைகளில் 50 நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும்’’ என்றார். இந்த நடைமுறையைக் கண்காணிக்க ஒவ்வொரு 10 பள்ளிகளுக்கும் ஒரு பெண் அதிகாரி என 16 பெண் அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ள னர். இவர்கள் மாநகராட்சி கல்வித் துறைக்கு தக வல்களை சமர்ப்பிப்பார்கள். இந்த முன்னெடுப்பு க்காக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்யப்பட்ட பிறகு இது நடைமுறைப்படுத்தப்படும்.