நாமக்கல், ஜூன் 2- நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாக னங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், நாமக்கல் (வடக்கு) மற்றும் நாமக்கல் (தெற்கு) வட்டா ரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாக னங்களை, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத் தில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் வியாழனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நாமக்கல் (தெற்கு) வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்குட்பட்ட 314 பள்ளி வாகனங்க ளும், நாமக்கல் (வடக்கு) வட்டார போக்குவரத்து அலுவ லகத்திற்குட்பட்ட 245 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 559 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய் வின் போது, வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் கட்ட மைப்பு, தகுதிவாய்ந்த ஓட்டுனர், நடத்துனர், மாணவர்கள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக் கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளி வாக னங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேக கட்டுப்பாட்டுக்கருவி, அவசர கால வழி, மாணவர்களின் புத்தகப்பையை வைக்க வசதி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா என்றும் மாவட்ட ஆட்சி யர் ஆய்வு செய்தார். மேலும், இந்த ஆய்வில் பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற் றும் வாகன பொறுப்பாளர்களுக்கு தீயணைப்பு துறையின ரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக் கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நாமக்கல் வரு வாய் கோட்டாட்சியர் த.மஞ்சுளா, துணை காவல் கண்கா ணிப்பாளர் சுரேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஈ.எஸ்.முருகேசன், முருகன், மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் மற்றும் தீயணைப்புத்துறை அலுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.