tamilnadu

img

பரஸ்பர வரிகள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு

பரஸ்பர வரிகள் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு

வாஷிங்டன்,ஏப்.10- உலக நாடுகளின் மீது விதித்துள்ள பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் சீனா மீதான வரிகள் நிறுத்தி வைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். பரஸ்பர வரி 90 நாட்களுக்கு நிறுத்தப் பட்டாலும் அடிப்படையாக அனைத்து நாடுகளின் மீதும் விதிக்கப்பட்டுள்ள 10 சத வீதமான வரி தொடரும் எனவும்  தெரிவிக் கப்பட்டுள்ளது. எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு பரஸ்பர வரி என்ற பட்டியலை டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 அன்று வெளியிட்டார். இதில் சீனப் பொருட்களுக்கான வரி 34 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி யாக அமெரிக்காவின் அனைத்து பொருட்க ளுக்கும் 34 சதவீதமாக வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி யாக அமெரிக்கா, சீனாவின் மீதான வரி விதிப்புக்கு கூடுதலாக 50 சதவீத  வரியை  விதித்தது. இவ்வாறாக சீனப் பொருட்கள் மீது 125 சதவீதம் வரை வரி விதிக்கப் பட்டுள்ளது. சீனாவும் அமெரிக்க வரிகளுக்கு பதிலடி வரிகளாக சுமார் 84 சதவீதம் வரை விதித்துள்ளது. சீனா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவின் உலோகப்  பொருட்கள் மீது 20 சதவீத வரியை அறிவித்துள்ளன. இந்த முடிவுக்கு ஹங்கேரியை தவிர 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஒப்புதல் கொடுத்துள்ளன.  இந்தச் சூழலில் தான் பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்திய 24 மணி நேரத்திலேயே சீனாவை தவிர பிற உலக நாடுகளின் பொருட்கள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்ப தாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.   வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு போன்ற தாக்கங்க ளாலும், உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்ற பிரச்சனையின் காரணமாகவும் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 24 மணி நேரத்திலேயே திரும்பப் பெற்றதாக சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.   வரி நிறுத்தம் பற்றி டிரம்ப் வெளி யிட்ட அறிக்கையில், “பரஸ்பர வரி விதிப்பை அடுத்து உலகளவில் பல்வேறு நாடுகளும் இது தொடர்பாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரி வித்தன. உலக நாடுகளின் விருப்பங்க ளை மதித்து நாங்கள் புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். பேச்சுவார்த்தை நடத்தி னால் பலன் கிடைக்கும். எங்களை எதிர்த்து வரிவிதித்தால் நாங்கள் மேலும் வரி விதிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளார்.