tamilnadu

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்

சென்னை,பிப்.11- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த  நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், அலகாபாத் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி யாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்ப ரில் பதவி ஏற்றார். அவரை சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் முடிவு செய்தது. இது தொடர்பான பரிந்துரையை கொலீஜியம் ஒன்றிய அரசுக்கும், குடியரசுத் தலைவ ருக்கும் அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில், கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று முனீஸ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.