சென்னை, ஜூலை 19 - மாஞ்சோலைத் தேயி லைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மே 17 இயக்கம், தேவேந்திரகுல வேளாளர் மக்கள் முன்னேற் றக் கழகம் உள்ளிட்ட இயக்கங் கள் கோரிக்கை விடுத் துள்ளன. மாஞ்சோலைத் தேயி லைத் தோட்டத் தொழிலா ளர் பிரச்சனை தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் செவ்வா யன்று (ஜூலை 16) நடை பெற்றது. இதில், விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவள வன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி, மே 17 இயக்க ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி, தேவேந்திர குல வேளாளர் மக்கள் முன்னேற் றக்கழக தலைவர் எஸ்.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் தொல். திருமா வளவன் எம்.பி. கூறியதாவது: நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை கடந்த 1929-ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்த கைக்கு எடுத்து நடத்தி வந்தது. 2028-ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்த கைக் காலம் முடிய வுள்ள நிலையில் அதற்கு முன் பாகவே 4 தலைமுறைகளாக பணியாற்றி வரும் தேயிலைத் தோட்ட தொழி லாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்பி வருகிறது. இதனால் 5 கிராமங்களை சேர்ந்த 600 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போர்டு நிறுவனம் மூடப் பட்டபோது ஆண்டுக்கு 143 நாட்கள் ஊதியம் இழப்பீடு என கணக்கிட்டு நஷ்ட ஈடு வழங்கியது. ஆனால், தேயிலை தோட்ட தொழிலா ளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் தான் இழப்பீடு தரப்படு கிறது. இதை ஏற்க முடி யாது. மாஞ்சோலை தோட்டத்தை அரசு அல்லது டான்டீ ஏற்று நடத்த வேண் டும், தேயிலை நிறுவனத்தி டம் இருந்து கூடுதல் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும், சமவெளிப்பகுதி யில் குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்க வேண் டும். இவ்வாறு தொல். திரு மாவளவன் கூறினார்.