சென்னை, டிச. 22- வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தில் 2019 - 20ஆம் ஆண்டு அறிக்கையின்படி நாடு முழுவதும் சுமார் 185 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், ‘நாட்டில் 2021-22 நிதியாண்டில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 130 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு ள்ளாதாக கூறினார்.