டிரம்ப்பின் தர்பாரில் மோடி
பிரதமர் மோடி பிப்ரவரி 13 அன்று அமெரிக்கா வின் வெள்ளை மாளிகைக்குப் பயணம் செய்தது என்பது அவர், தன்னுடைய நண்பர் டொனால்ட் டிரம்புடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதைக் காட்டுவதற்கும், அவர் வழங்கிய புகைப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடை வதற்குமேயாகும். ஆனால், நடந்தது என்னவென்றால், மோடியின் பயணமானது அமெரிக்கா, இந்தியாவை எவ்வளவு கீழ்த்தரமான முறையில் வைத்திருக்கிறது என்பதை உலகத்திற்கு காட்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
மோடியின் அவசரம்
இந்தியப் பிரதமருக்கு ஜனாதிபதி டிரம்புடன் அதிகாரப்பூர்வ சந்திப்பு நடத்த எந்த அவசரமும் இல்லை. ஜனவரி 20 அன்று பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு கிடைக்காத பிறகு, டிரம்ப் வெள்ளை மாளிகை யில் எவ்வாறு நிலைபெறுகிறார் என்பதையும், அவர் வெளியிடவிருக்கும் கொள்கைகளின் திசையையும் காண மோடி அரசாங்கம் காத்திருந்திருக்கலாம். அமெரிக்கா, சர்வதேச உறவுகளை எப்படிப் பேணப் போகிறது என்று எதிர்பார்த்திருந்திருக்கலாம். ஆயி னும் மோடி மற்றும் பாஜக-வினரின் உள்ளுணர்வு என்பது அமெரிக்காவுடன் தாங்கள் எவ்வளவு நெருக்க மாக இருக்கிறோம் என்பதையும் இந்தியா ஓர் உல களாவிய சக்தியாக மாறி வருவதாக உலகத்திற்குக் காட்டுவதற்காகவுமேயாகும். எனவே டிரம்ப் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் அவரைச் சந்தித்த நான்காவது வெளிநாட்டுத் தலைவ ராக மோடி மாறியுள்ளார். மற்ற மூவரும் இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஜோர்டான் தலைவர்களாவார்கள். இவர்கள் அனைவருமே அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளாவர்.
மோடி முன்னிலையிலேயே குற்றச்சாட்டு
வெள்ளை மாளிகையில் டிரம்புடனான மோடியின் அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு முன்னதாக, சில மணி நேரங்களுக்கு முன்னர், இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் “பதிலடி வரிகள்” (“reciprocal tariffs”) விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம், எந்தவொரு நாடும் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரிகளுக்கு சமமான வரிகளை அமெரிக்காவும் விதித்திடும். மேலும், சந்திப்பிற்குப் பிறகு மோடியுடன் நடத்திய கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், இந்தியா அதிக வரிகளை விதிப்பதாக டிரம்ப் புகார் கூறினார். இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டு அறிக்கை, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் தனது கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளை முன்வைப்பதில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார் என்பதையே காட்டுகிறது. இரு நாடு களுக்கும் இடையிலான மொத்தம் 130 பில்லியன் டாலர் வர்த்தகத்தில், அமெரிக்கா தரப்பில் 45.7 பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யவும், அதிக அளவில் அமெரிக்க பாது காப்பு உபகரணங்களை வாங்கவும் டிரம்ப் இந்தியாவை ஏற்க வைத்திருக்கிறார்.இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையும் பாதுகாப்பு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவது மற்றும் பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளின் கொள்முதல் அமைப்புகளை சிறப்பாக சீரமைப்பது பற்றிப் பேசுகிறது.
டிரம்ப்பை மகிழ்விக்கும் மோடி
டிரம்பை மகிழ்விப்பதற்காக, இந்தியா அமெரிக்கா விடமிருந்து அதிக விலை கொடுத்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்க இருக்கிறது. இப்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கிடும் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை மிகவும் மலிவானவை. இதைக் கைவிட்டுவிட்டு, அமெரிக்காவின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, மிக அதிக விலை கொடுத்து இனி அமெரிக்காவிடமிருந்து வாங்கப் போகிறது. இதேபோன்றுதான் இந்தியா முன்பு ஈரானிட மிருந்து மிகவும் தரமான கச்சா எண்ணெய்யை மிகவும் மலிவான விலைக்கு வாங்கி வந்தது. அமெரிக்காவின் மிரட்டலுக்குக் கட்டுப்பட்டு அதனை இந்தியா நிறுத்திவிட்டது.
ராணுவ நெருக்கம்
டிரம்ப் நிர்வாகம் இப்போது இந்தியாவை ஒரு புதிய பத்து வருட பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்திருக் கிறது. இது இந்தியாவை ராணுவரீதியாக அமெரிக்கா வுடன் நெருக்கமாக இணைத்திடும். அமெரிக்கா, இந்தியாவிற்கு எஃப்-35 ஸ்டெல்த் போர் விமானங் களை விற்பனை செய்ய இருக்கிறது. இத்தகைய போர்விமானங்கள் மிகவும் விலை உயர்ந்தவை களாகும். இவை இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டால் தாங்க முடியாதவைகளாகும். இது மோடி அரசாங்கத்தைக் கவலையடையச் செய்திருக்கிறது. ஆயினும் இதனை வாங்காமல் நிராகரிப்பது மோடியால் முடியாத ஒன்று. கூட்டு செய்தியாளர்கள் கூட்டத்தில் டிரம்ப், இந்தியாவிற்கு “பில்லியன் கணக்கான டாலர்கள் விற்பனை” செய்திருப்பதாக அறிவித்திருக் கிறார். மோடி ஆட்சியின் கவலைகளில் ஒன்று, டிரம்ப் ‘குவாட்’ என்கிற நான்கு நாடுகளின் கூட்டணிக்கும், இந்தோ-பசிபிக் ராணுவக்கூட்டணிக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். கூட்டு அறிக்கையானது, ‘குவாட்’ தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக புதுதில்லியில் ஜனாதிபதி டிரம்பை விருந்தினராக அழைப்பது பற்றி பேசுகிறது. இது மோடி மிகவும் விரும்பும் ஒன்றாகும்.
அமெரிக்காவுக்கு அகலத் திறக்கும் கதவு அமெரிக்காவும்
இந்தியாவும் வர்த்தக உறவுகளை மறுபரிசீலனை செய்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை எட்ட திட்டமிட்டி ருக்கின்றன. எனினும் டிரம்ப் நிர்வாகம் முதலீடு மற்றும் வர்த்தகத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்திடும். இந்தியாவின் தரவு பாதுகாப்பு விதிகள், மானியங்கள், வரி ஆட்சி மற்றும் வெளி நாட்டு வணிகங்களை விட உள்நாட்டு வணிகங்களில் காணப்படும் அனைத்து அம்சங்களையும் அமெரிக்கா ஆராய்ந்திடும். அமெரிக்கா, தன் நாட்டின் பொருளாதாரத்தைச் சுற்றி ஒரு பாதுகாப்பான சுவரை ஏற்படுத்திக்கொள்ளும் அதே சமயத்தில், அமெரிக்காவின் பொருள்களுக்கு இந்தியாவின் சந்தையை அகலத்திறப்பதே டிரம்பின் நோக்கமாக இருந்திடும்.
இந்திய மக்களுக்கு மோடி அரசு துரோகம்
அமெரிக்க அணு உலைகளை வாங்குவதற்கு அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்பார்த்து, மோடி அரசாங்கம் ஏற்கனவே சிவில் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தைத் திருத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக் கிறது. கூட்டு அறிக்கை இந்தியாவிற்கு ஆறு வெஸ்டிங்ஹவுஸ் அணு உலைகளை விற்பதை விரைவு படுத்துவது பற்றிப் பேசுகிறது. இங்கே மீண்டும், அணு விபத்துக்கள் ஏற்பட்டால் அணு உலைகளை வழங்கு பவர்களின் பொறுப்பை மோடி அரசாங்கம் நீக்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியர்களின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் மோடி அரசாங்கம் துரோகம் இழைத்திருக்கிறது. மோடியின் அமெரிக்கப் பயணத்தின் மற்றொரு வெளிப்படையான அம்சம், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததற்காக நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் நியாயமான மற்றும் மனிதாபிமானமாக நடத்தப்படுவதை உறுதி செய்யத் தவறியதாகும். முதல் கட்டமாக இந்தியர்கள் கைவிலங்குகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு இராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்ட போது, இந்தியாவில் கடும் கோபம் எழுந்தது. வெட்கக்கேடான வகையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் இது அமெரிக்க அதி காரிகளின் நிலையான செயல்பாட்டு நடைமுறை யின்படி நடந்தது என்று கூறினார். மோடி இந்த விஷயத்தை டிரம்பிடம் எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர்களின் சந்திப்பு எந்த விளைவையும் ஏற்படுத்திடவில்லை. மோடியின் வருகைக்குப் பிறகு, நாடுகடத்தப்பட்டவர்கள் மேலும் இரண்டு விமானங்களில் முன்பு வந்ததுபோலவே கை விலங்குகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு அமிர்தசரஸ் வந்துள்ளனர். இதனைக் கண்டித்திட மோடிக்குத் துணிவில்லை. ஆனால் அதே சமயத்தில் சுயமரியாதையுடன் கொலம்பியா மற்றும் மெக்சிகோ ஜனாதிபதிகள் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மூவரும் ஒருவரே!
இறுதியாக, வாஷிங்டன் வருகை, அவர் தனது தீவிர வலதுசாரி கொள்கைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ஏகாதிபத்தியத்துடன் டிரம்பைப் போலவே இருக்கிறார் என்பதற்கான சமிக்ஞையேயாகும். அமெரிக்கா காசாவைக் கைப்பற்றி அங்கு வசிக்கும் அனைத்து பாலஸ்தீனர்களையும் இடம்பெயர்த்து அதை மேம்படுத்த வேண்டும் என்ற டிரம்பின் திடுக்கிடும் அறிவிப்புக்கு இந்திய அரசாங்கம் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. கூட்டு பத்திரிகை யாளர் சந்திப்பின்போது டிரம்ப் இதை அறிவித்த போது நேதன்யாகு மகிழ்ச்சியடைந்தார். ஆயினும் சர்வதேச சட்டத்தின் இந்த அப்பட்டமான மீறல் குறித்து மோடி டிரம்பிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பேசியிருக்கவும் முடியாது. ஏனெனில் டிரம்ப், நேதன்யாகு மற்றும் மோடி ஆகிய மூவருமே ஒரே சித்தாந்தத்தில் ஊறித் திளைப்பவர்களேயாவர்.