பஞ்சாலை - விதைத்தறி தொழிலாளர் சங்க அகில இந்திய மாநாட்டில் ஏ.கே.பத்மநாபன் பேச்சு
கோயம்புத்தூர், மே 17– தொழில்களை நாசப்படுத்துவதே ஒன்றிய ஆட்சியாளர்களின் கொள்கையாக உள்ள நிலை யில், அதற்கெதிராக தொழில் முனைவோரும், தொழிலாளர்களும் ஒன்றிணைந்து களத்திற்கு வந்து போராடும் சூழல் உருவாகியுள்ளதாக சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே. பத்மநாபன் பேசினார். சிஐடியு அகில இந்திய மையத்தின் ஒருங்கி ணைப்பில் பஞ்சாலை மற்றும் விசைத்தறி தொழி லாளர்கள் சங்கத்தின் அகில இந்திய முதல் மாநாடு கோவையில் செவ்வாயன்று நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேமலதா தலைமை தாங்கினார். சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பத்மநாபன் வர வேற்புரையாற்றினார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தும், பொது மாநாட்டை துவக்கி வைத்தும் பேசினார்.
அவர் பேசுகையில், பஞ்சு விலை 100 சதவீதம் உயர்வு, நூல் விலை உயர்வு, இருப்பை உணராமல் ஏற்றுமதி செய்வது, செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி கடுமையாக விலையை உயர்த்துவது உள்ளிட்ட ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் ஜவுளித்துறை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஜவுளித்துறை மட்டுமல்ல, நாட்டின் அனைத்து துறைகளும் தற்போது நெருக்கடி யை எதிர் கொண்டுள்ளன. நாடு முழுவதும் தொழில்முனைவோர் போராட்டத்தை முன்னெ டுத்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். “பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு குறு தொழில்கள், கட்டுமானம், வியாபாரம் உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக பாதித்தன. இதனைத்தொடர்ந்து அடுத்த தாக்குதலாக ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஒன்றிய அரசு தொடுத்தது. இதுபோன்ற காரணங்களால் தொழில்கள் அனைத்தும் கடுமையான நெருக்கடியை சந்தித்தன. ஆனால் கொரோனா தொற்றால் தான் இந்த நெருக்கடி என ஒன்றிய ஆட்சியா ளர்களால் திசை திருப்பப்படுகிறது. இதே காலகட்டத்தில்தான் அதானி, அம்பானி, டாடா போன்ற நிறுவனங்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது. அதானி, அம்பானி, டாடா ஆகியோரின் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நாடே பொம்மலாட்டக் களம் போல் மாற்றப்பட்டுள்ளது என்று ஏ.கே. பத்மநாபன் சாடினார்.
மேலும், “இன்று மின்சார தட்டுப்பாடு குறித்து பேசப்படுகிறது. நிலக்கரி கிடைக்கவில்லை என்கிறார்கள். நிலக்கரி சுரங்கங்களில் தொழிலா ளர்கள் எந்த வேலை நிறுத்தமும் செய்ய வில்லை. உற்பத்தி பாதிக்கவில்லை. எப்போதும் போல நிலக்கரி கிடைக்கிறது. ஆனால் அதனை கொண்டு செல்வதற்கான ரயில் உள்ளிட்ட வாகன ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்ய வில்லை என்பதே நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு காரணம். தொழில்களை நாசப்படுத்துவதே ஒன்றிய அரசின் கொள்கையாகிப்போன நிலை யில் தொழில்முனைவோர், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் ஒன்றிணைந்து போராடும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார். பஞ்சாலை , விசைத்தறி தொழிலாளர்களின் அகில இந்திய மாநாடு இதர தொழில்களில் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்க பயன்படும். இந்த நெருக்கடியை எதிர்த்து திரண்டு எழுகிற போது சாதி,மத ரீதியாக தொழி லாளி வர்க்கத்தை பிளவுபடுத்தி, திசைதிருப்பல் வேலை நடைபெறும். இதுபோன்ற செயல்கள் தொழிலாளி வர்க்கத்திற்குத்தான் இழப்பு என்பதை நாம் நமது வர்க்கத்தினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, சிஐடியு மாநில பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரை யாற்றினர். மாநாட்டின் அறிக்கையை சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலை யான் முன்வைத்தார். இந்த அறிக்கையின் மீது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் விவாதித்தனர். பஞ்சாலை தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலா ளர் எம்.அசோகன், தமிழ்நாடு விசைத்தறி சங்க பொதுச்செயலாளர் எம்.சந்திரன், தலை வர் பி.முத்துசாமி, சிஐடியு மாநில செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தலை வர்கள் பங்கேற்றனர்.