tamilnadu

img

“ஏழை மாணவர் கல்வியை பறிக்கிறது மோடி அரசு”

திருவள்ளூர், ஏப்.24- நீட் என்ற பெயரில் ஏழை மாணவர்க ளின் கல்வியை மோடி அரசு தட்டிப் பறிப்பதால் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடருவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டமாக பேசினார். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய கோரிக்கைகளை வலி யுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் கடந்த 21 நாட்களாக நாகர்கோவில் முதல் சென்னை வரை  கி.வீரமணி தலைமையில் பிரச்சாரம் மேற்கொளப்  பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக சனிக்கிழமை அன்று (ஏப். 23)  திருத்தணியில் பொதுக்குழு உறுப்பி னர் மா.மணி தலைமையில் பொதுக்  கூட்டம் நடைபெற்றது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், வட்டச் செயலாளர் வி.அந்தோணி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.அப்சல் அகமது, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் ஏ.கரி முல்லா, சட்டமன்ற திமுக உறுப்பி னர் எஸ்.சந்திரன், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, விசிக மாவட்டச் செயலாளர் மு.வ.சித்தார்த்தன் உட்பட பேசினர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், “ஏழை, எளிய, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையை தட்டிப் பறிக்க கூடாது.  நமது பண்பாடு, பாரம்பரியம் மண் மூடி போய் விடக்கூடாது. ஆகவே, கலாச்சார சீரழிவுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்கிற ஒரே நோக்கத்திற்காகத் தான் நீட் எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்  பட்டு வருகிறது” என்றார். மாநில உரிமை, சுயாட்சி, ஒன்றி யத்தில் கூட்டாட்சி என்ற கோட்பாட்டிற்கு ஆபத்தை உருவாக்கும் முயற்சியில்  மோடி அரசு செயல்பட்டுக்கொண்டு வருகிறது என்றும் அவர் கடுமையாக சாடினார். சென்னை மருத்துவர்கள் பலரும் புதிய புதிய சாதனை படைத்து வரு கின்றனர். இவர்கள் யாரும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்த வர்கள் அல்ல. இப்போது மட்டும் புதிதாக நீட் தேர்வு கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்றும் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

ஆரம்பத்தில் மருத்துவக் கல்லூரி களில் மாணவர்கள் சேர்க்கைக்காக நீட் தேர்வு கொண்டு வந்தார்கள். படிப்படியாக எல்லா துறைக்கும் விரைவுபடுத்துகின்றனர். அடுத்தப்படியாக கலைக் கல்லூரி களுக்கும் நீட் போன்று நுழைவுத் தேர்வு எழுதினால் தான் மாணவர் சேர்க்கை என்ற மிக மோசமான நிலை உருவாகும் என்றும் வசதி படைத்த மாணவர்களால் தான் பயிற்சி மையங்க ளுக்கு செல்லும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், அதை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் மறுத்து வருகிறார். தமிழ்நாட்டின் நலனுக்கு எதையும் செய்யாத ஆளுநர் தேவையா  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டுவர எனவும் வினவினார். அனைத்து சாதியினரும் அச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை பாடுபட்டு கொண்டு வந்தார் தந்தை பெரியார். ஆனால், இன்று வரை அந்த சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நீதி மன்றமும் தடையா இருந்து வருகிறது. ஆனால், பெரியாரின் கனவை,  இன்றைக்கு கேரளா இடது முன்னணி அரசு நிறைவேறியிருக்கிறது. ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் அர்ச்சகர்க ளாக பணியாற்றுகின்றனர். கருவக்க்  குள் சென்று அபிஷேகம் செய்கிறார்  கள் என்றும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கி.வீரமணி

திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி பேசுகையில், “போராட்டக்  களத்தை நினை வூட்டத்தான் இந்த பிரச்சார பயணம். மக்களின் எதிரிகள் யார்? என்பதை கண்டறிந்து நேரம், பருவம் பார்க்காமல்  போராட்டத்தை நடத்தவேண்டிய காலம் இது. அவ்வளவு பெரிய ஆபத்து வந்துள்ளது”என்றார். குலக்கல்வி வந்தபோது அரை நாள் படிக்க வேண்டும், அரை நாள் தந்தை  செய்த தொழிலை செய்ய வேண்டும் என  ஆச்சாரியர்கள்  வற்புறுத்திய நேரத்தில்,  தந்தை பெரியார் இதை எதிர்த்து மிகப்பெரிய அறிவுப் புரட்சியை உருவாக்கினார் என்றும் அவர் கூறினார்.