tamilnadu

img

மோடியின் இஸ்ரேல் ஆதரவு இந்திய நலன்களுக்கு எதிரானது

சென்னை, அக்.14– இஸ்ரேலின் அடாவடியையும், அதை ஆதரிப்பவர்களையும் அம்  பலப்படுத்துவோம். மக்களின் பிரச்ச னைக்கு தீர்வு காணும் நடவடிக்கை களை தீவிரப்படுத்துவோம். இந் தியா அணியை வலுப்படுத்துவோம்; விரிவுபடுத்துவோம் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் பிர காஷ் காரத் அறைகூவல் விடுத்துள் ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் வெள்ளியன்று (அக்.13) நுங்  கம்பாக்கத்தில் ‘சிபிஎம் அரசியல் பேசும் பொதுக்கூட்டம்’ நடைபெற் றது. இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் பேசியதன் சுருக்கம் வருமாறு:  

இஸ்ரேல் நடத்தி வரும் போரால், பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு  இருக்கிறார்கள். முதல் 6 நாட்களில் 1500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர் கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்  களில் 60 விழுக்காடு பெண்களும் குழந்தைகளுமாக உள்ளனர். இவற்றையெல்லாம் செய்து கொண்டே, 41 சதுர கிலோ மீட்டர்  பரப்பில் 23 லட்சம் மக்கள் வாழ்கிற  காசாவிற்குள் நுழைந்து தரைமட்ட மாக்குவோம் என்று இஸ்ரேல் அறி வித்துள்ளது. மக்களையும் சேர்த்துக்  கொல்வோம் என்ற இந்த மிரட்டல், மேற்காசிய பகுதியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், உலகம்  முழுவதும் பாதிப்பை உருவாக்கும். மின்சாரம், எரிபொருள், குடிநீர்  உள்ளிட்ட அனைத்தும் இஸ்ரேல் வழி யாகவே காசாவிற்கு செல்கிறது. அவ்  வாறிருக்கையில், காசா பகுதியை  இஸ்ரேல் சுற்றி வளைத்துவிட்டு, அத்தியாவசிய பொருட்கள் செல்  வதை தடை செய்துள்ளது. இதனால்  அங்குள்ள மக்கள் பட்டினியால் மர ணிக்கும் நிலை உருவாகி உள்ளது. 16 வருடமாக காசாவில் உள்ள  பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ஒடுக்கி வருகிறது. அதற்கு எதிர் வினையாக ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. ஆனால் இதனை மறைத்து அமெரிக்கா அதன் கார்ப்ப ரேட் ஊடகங்கள் மூலம், ஹமாஸ்  ஒரு பயங்கரவாத அமைப்பு. அது  எல்லைதாண்டிச் சென்று தாக்கு கிறது என்று விமர்சிக்கிறது. 1967 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாக பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான  நாட்டை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ளதை பேச மறுக்கின்ற னர். பாலஸ்தீனியர்களை அடித்து  துரத்திவிட்டு நிலம் உள்ளிட்டவை களை பறித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்தவே ஹமாஸ் பதிலடி தாக்குதலை தொடுத்துள்ளது.

இஸ்ரேலை ஆதரிப்பது ஏன்?

விடுதலைப் போராட்டக் காலத்தி லிருந்தே, காந்தி உட்பட இந்திய  தலைவர்கள் பாலஸ்தீன மக்க ளுக்கே ஆதரவு அளித்து வந்துள்ள னர், ‘யூதர்களுக்கு நியாயம் வழங்க  வேண்டும் என்பது நியாயம்தான், ஆனால் காலம் காலமாக பாலஸ்தீ னத்தில் குடியிருக்கும் அரபு மக்  களை வெளியேற்றிவிட்டு யூதர் களுக்கு நியாயம் வழங்க முடி யாது’ என்றார் காந்தி. எனவே, அங்கு  அமைதி திரும்ப வேண்டுமன்றால் இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை கை விட வேண்டும். பாலஸ்தீனம் என்ற சுதந்திர தேசம் அமைய வழிவிட வேண்டும். நம்முடைய ஆதரவை ஒருமைப்பாட்டை பாலஸ்தீன மக்க ளுக்கு தெரிவிக்க வேண்டும்.  மாறாக, இந்தியாவின் பாரம்பரி யமான நிலைபாட்டை கைவிட்டு, மோடி அரசு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மோடியும் அவ ரது அரசாங்கமும் இஸ்ரேலை ஆத ரிப்பது ஏன்? இஸ்ரேலில் கடைந் தெடுத்த பிறப்போக்கான தீவிர வலது சாரி கட்சிகளின் கூட்டணி அரசு ஆட்சி  செய்து வருகிறது.

மோடியின் நண்பர் 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மோடியின் நெருக்க மான நண்பர். இருவருமே தங்கள்  நாடுகளில் எதேச்சதிகார அரசை  நிறுவ முயற்சித்து வருகிறவர்கள், ஜனநாயகத்தை படுகொலை செய்  வது, நீதித்துறையை அதிகாரமி ழக்கச் செய்வது என்று செயல்பட்டு வருகிறவர்கள். நேதன்யாகுவின் நிலைபாடுகளை இஸ்ரேல் மக்கள் ஆதரிக்கிறார்களோ இல்லையோ முதலில் மோடி ஆதரிக்கிறார்.பாலஸ்தீனத்தில் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் நேதன்யாகு விரட்டியடிக்க பார்க்கிறார். பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார அமைப்புகள் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். சித்தாந்த ரீதியாக ஒரே நிலைபாட்டில் இருப்பதால் மோடியும் நேதன்யாகுவும் நெருக்கமான நண்பர்களாக உள்ளனர். இதை எதிர்க்காவிடில் இந்தியாவின் நல னுக்கு பாதகம் ஏற்படும்.

அரபு நாடுகளில் வெடித்த போராட்டங்கள்

கடந்த சில நாட்களாக மத்திய கிழக்குப் பகுதியில், அரபு நாடுகளில் இஸ்ரேலைக் கண்டித்து மக்கள் போராட்டங் கள் வெடித்துள்ளன. குவைத், சார்ஜா, துபாய், அபுதாபி, சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகளில் லட்சக்க ணக்கில் இந்தியர்கள், தமிழர்கள் வேலை செய்கின்றனர். அரபு மக்களுக்கு எதிரான நிலைபாட்டை பிரதமர் மோடி எடுத்துள்ளதால், அங்குள்ள மக்கள் இந்தியாவையும், அங்குள்ள இந்தியர்களையும் எதிரியாக பார்க்கும் சூழல்  எழுந்துள்ளது. இஸ்ரேல் ஆதரவு மூலம் அரபு நாடுகளு டனான இந்தியாவின் உறவை மோடி சீரழித்துள்ளார். பெட்ரோலிய எண்ணெய் வளம் வளைகுடாவில் அதிகம் உள்ளது. இஸ்ரேலியத் தாக்குதல் அதிகமானால் கச்சா எண்ணெய் விலை உயரும். அதை வாங்குகிற நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளும் உயரும். இந்தியாவில் ஏற்கெனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. இஸ்ரேலை ஆதரிக்கும் ஒருதலைபட்சமான தன்னிச்சையான நட வடிக்கையால் இந்தியாவில் உள்ள எளிய மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.  

காலங்காலமாக பாலஸ்தீன மக்களை ஆதரித்து வரும் இந்திய மக்களின் ஆதரவு இப்போதும் பாலஸ்தீன மக்க ளுக்கே இருக்கும். இஸ்ரேலின் அடாவடியையும், அதை ஆதரிப்பவர்களையும் அம்பலப்படுத்துவோம். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்திய மக்களின் கருத்தை திரட்ட இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளோம். 6 மாதத்தில் மக்களவை தேர்தல் வரவிருக்கிறது. அதற்குள் ஒரேஒரு எதிர்ப்புக் குரல் கூட வரக்கூடாது என்று மோடி அரசு செயல்படுகிறது. 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இந்தியா’ என்ற அணியை உருவாக்கிய பிறகு பாஜக பதற்றமடைந்துள்ளது. எனவே, மத்திய முகமைகளை ஆயுதமாக பயன்படுத்துகிறது. அம லாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற வற்றை எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் கருவிகளாக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறது. ஒருசிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இது இன்னும் அதிகரிக்கும். 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற முடியாது என்ற அச்சம் பாஜகவிற்கு எழுந்துள்ளது. மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகப் படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் கொள்கையை எதிர்த்து அனைத்து பகுதி மக்களையும் அணிதிரட்ட வேண்டும். ‘இந்தியா’ அணியை வலுப்படுத்த, விரிவு படுத்த வேண்டும். இதுதான் நமது பிரதான கடமையா கும். பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றாமல், ஜனநாய கம், மதச்சார்பின்மை, மாநில உரிமை போன்றவற்றை பாதுகாக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.  அவரது ஆங்கில உரையை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மொழியாக்கம் செய்தார்.