விடுபட்ட மகளிருக்கு செப்டம்பருக்குள் உரிமைத் தொகை
முதலமைச்சர் அறிவிப்பு
திருப்பத்தூர், ஜூன் 26 - திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரை யாற்றினார். அப்போது, தமி ழக வரலாற்றில் இல்லாத அள விற்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதிக திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மக்கள் அன்பை வாரி வழங்கி வருகின்ற னர். 2026 மட்டுமல்ல 2031 ஆக இருந்தாலும் 2036 ஆக இருந்தா லும் என்றைக்கும் நாம்தான் தமிழ்நாட்டை ஆளப் போகிறோம் என்று தெரிவித்தார். ஓரவஞ்சனை தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாத கடந்தகால ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட வளர்ச்சியை திமுக அரசு சீர்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறினார். தமிழகத்துக்கு ஓரவஞ்ச னை செய்கிறது ஒன் றிய அரசு. ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்தா லும் தமிழ்நாட்டு வளர்ச்சி யை தடுக்க முடியவில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித் தார். தமிழ்நாடு முழுவதும் விடு பட்ட மகளிருக்கு ஆகஸ்ட், செப்ட ம்பருக்குள் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரை முருகன், எ.வ. வேலு, ஆர். காந்தி, மக்களவை உறுப்பினர்கள் ஜெக த்ரட்சகன், கதிர் ஆனந்த், சட்ட மன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.