கிருஷ்ணகிரி,பிப்.4- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கெலமங்கலம், ராயக்கோட்டை, பேரிகை, உத்தனப்பள்ளி, காவேரிப் பட்டிணம், போச்சம்பள்ளி பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் விவ சாயிகள் புதினா பயிரிட்டுள்ளனர். புதினாவுக்கு எப்போதும் விலை கிடைக்கும் என்பதால் சமீப காலமாக அதிக அளவில் சாகுபடி செய்து வரு கின்றனர். ஒரு கட்டு 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வந்த வியாபா ரிகள் 10 ரூபாய்க்கு குறைவாக கொள்முதல் செய்தது கிடையாது. தற்போது, சந்தைக்கு புதினா கட்டுகள் வரத்து அதிகரித்து விட்டதால் கட்டு ஒன்று ரூ. 2, 3 என அடிமாட்டு விலைக்கு கேட்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.