tamilnadu

பேச்சுப் போட்டிக்கு கால நீட்டிப்பு சிறுபான்மை ஆணையம் அறிவிப்பு

சென்னை, பிப்.25- மாநில சிறுபான்மை ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாண வர்கள் வருகிற மார்ச் மாதம் பத்தாம்  தேதி வரைக்கும் பதிவு செய்து  கொள்ள கால நீட்டிப்பு செய்யப்பட் டுள்ளது. ஒன்றே குலம் ஒருவனே தேவன்!, மனித நேயம் ஓங்கட்டும் மத வெறி நீங்கட்டும்!, உள்ளிட்ட 21 தமிழ்  தலைப்புகளில் இந்த பேச்சு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் போட்டி  நடைபெறுகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசு  தொகையாக 10,000 ரூபாயும், மூன்றா வது இடத்தைப் பிடிக்கும் மாணவ ருக்கு 5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மாநில அளவில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிக்கும் மாணவ ருக்கு 1 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்திற்கு 50 ஆயிரமும், மூன்றாவது பரிசாக 25000 வழங்கப்படுகிறது. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள்,  மாநில சிறுபான்மை யினர் ஆணையம், 735 அண்ணா சாலை  எல்எல்ஏ கட்டடம், மூன்றாவது தளம், சென்னை-2 என்ற முகவரிக்கு வருகிற மார்ச் மாதம் 20-ஆம் தேதிக்குள் பெயர்களை அனுப்பி வைக்க வேண்டும்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற காரணத்தினால் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருவதாலும் மாணவர்கள் பலரும் தங்களது பெயரை பதிவு செய்ய முடியவில்லை என்று தெரிவித்த கோரிக்கையை ஏற்று  வருகிற மார்ச் மாதம் 10ஆம்  தேதி வரை மாணவர்கள் தங்களது பெயரை மின்னஞ்சல் மூலமாகவும் அஞ்சல் முகவரிக்கும் பதிவு செய்து கொள்ளலாம் என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.