tamilnadu

img

தொடர் ஓட்டத்தில் தங்கம்: நெல்லை மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

சென்னை,ஜூன் 14- தென்கொரியாவின் நடந்த தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற நெல்லை மாணவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் மரியதேவ சேகர். இவர் அப்பகுதியிலுள்ள தெரசா மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்து அவர்களது முன்னேற்றத்திற்காக வழிகாட்டுதலாக இருந்து வருகிறார். இதர மாணவர்களை போன்று அவரது மகளான கனிஸ்டா டினா விற்கும் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பயிற்சியும் ஊக்கமும் அளித்துள்ளார். கனிஸ்டா டினா கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். கனிஷ்டா டினாவும் தந்தையின் உத்வேகத்தால் பல கட்ட பயிற்சி களை மேற்கொண்டு தென்கொரியா  வில் நடைபெற்ற உலக அளவிலான  தொடர் (ரிலே) ஓட்டப் போட்டியில்  பங்கு பெற்றார். அவருடன் தமிழ் நாட்டை சேர்ந்த கூடுதல் பங்களிப்பாக 4 பேர் கலந்துகொண்டு போட்டியை சந்தித்தனர். இவர்களில் கனிஷ்டா டினா ரிலே ஓட்டத்தில் முதலிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். உலக அளவில் தங்கப்பதக்கம் வென்ற கனிஷ்கா டினாவிற்கு சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து கவுரவப்படுத்தினார்.