tamilnadu

img

பிரியா நினைவு கால்பந்து போட்டி

சென்னை,டிச.2- மறைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் நினைவாக 6 மாநிலங்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரு உள்விளை யாட்டு அரங்கில் மகளிர் கால்பந்தாட்ட போட்டி முன்னேற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த  அவர், “ திமுக இளைஞ ரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மறைந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவின் நினைவாக, டிச.3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்கும் மகளிர் கால் பந்து போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார். 4 ஆம் தேதி மாலை நிறைவு விழாவில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் ரொக்கம், இரண்டாம் பரிசாக ரூ. ஒரு லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 50  ஆயிரத்துடன் பரிசுக் கோப்பைகளை வழங்க உள்ளார். இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாவட்டங்களின் முன்னணி கால்பந்து குழுக்களும், சென்னையை சேர்ந்த 6 கால்பந்து குழுக்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த  குழுக்கள் உட்பட 18 கால்பந்தாட்ட குழுக்கள் பங்கேற்கின்றன” என்றார்.