tamilnadu

img

அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை அவசியம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை,டிச.4- அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை இருப்பது அவசி யம் என நிதி மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரி வித்துள்ளார். தமிழக அரசுப் பணி களுக்கான போட்டித் தேர்வு களில் தமிழ் மொழித் தாளைக் கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. இதற்குப் பல் வேறு கட்சிகள் மற்றும் ஆசிரி யர்கள் சங்கம் சார்பில் பாராட்டு கள் குவிந்து வருகின்றன. இதனிடையே அரசாணை குறித்து நிதி மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் பழனிவேல் தியா கராஜன் சென்னையில் செய் தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழ்நாட்டில் துறை ரீதியா கப் பல்வேறு நடவடிக்்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, செப்டம்்பர் 13ஆம் தேதி சட்ட மன்றத்தில் போட்டித் தேர்வு களில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாகப்பட்ட வேண் டும் எனத் தனது  கோரிக்கைக்கு இணங்க அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் ஆக்கப்படும். கடந்த காலங்களில் தமிழ் மொழி அறியாத பிற மாநிலப் பணியாளர்கள் பலர் முறையாகப் பிரித்துப் பணி அமர்த்தப்படவில்லை. அதனைத் திருத்தும் வகையில் இந்த அரசாணை அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் வெளி மாநிலப் பணியாளர்கள் காரண மாக நிர்வாகத்்தில் பல தவறு களும்  குளறு படிகளும் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் களைவதற்காக அரசுப் பணியாளர்களுக்குத் தமிழ்ப் புலமை இருப்பது அவசியம். தற்போது பொறுப்்பெற் றுள்ள அரசைப் பொறுத்தவரை போட்டித் தேர்வு அடிப்படை முறைகளில் சில மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந் துள்ளது. ஏற்கெனவே போட்டித் தேர்வுக்குத் தயா ராக இருந்த மாணவர்கள் கரோனா பரவல் காரணமாகத் தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. போட்டித் தேர்வுக்கெனத் தங்க ளைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கும் தமிழ்  இளை ஞர்களின் தாகம் புரிந்த தாலேயே தமிழ்  மொழித் தேர்வு கட்டாயமாக் கப்பட்டது. அவர்களின் கவலைகளைப் போக்க இதுவே தக்க தருணம் என்பதைத் தமிழக அரசு உணர்ந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.