tamilnadu

img

பேராவூரணி பகுதியில் புதிய கட்டிடங்கள் அமைச்சர் திறந்து வைத்தார்

பேராவூரணி பகுதியில் புதிய கட்டிடங்கள்  அமைச்சர் திறந்து வைத்தார் 

தஞ்சாவூர், செப். 11-  தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 3 கட்டிடங்களை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் புதன்கிழமை திறந்து வைத்தார். பேராவூரணி அருகே, குருவிக்கரம்பையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.12 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவு தானிய சேமிப்புக் கிடங்கு மற்றும் பொதுவிநியோக அங்காடி கட்டிடத்தை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் முன்னிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பழனிவேல், திமுக சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, பேராவூரணி அருகே கொளக்குடி ஊராட்சியில் ரூ.12 லட்சத்து 56 ஆறாயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொதுவிநியோக கட்டடத்தையும், களத்தூர் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம நூலக கட்டடத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.