சென்னை,ஜன.6- தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது தொடர்பாக அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் விளக்கம் அளித்து பேசுகையில், 2023 ஆம் ஆண்டில் ஜனவரி 3 ஆம் தேதி ஆளுநர் உரையாற்றும்போது, ஏற்கனவே ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு அச்சிடப்பட்டு உறுப்பி னர்களுக்கு வழங்கப்பட்ட உரையில் இடம்பெற்றுள்ள சில பகுதிகளை வேண்டுமென்றே விடுத்தும், அச்சி டப்படாத சில பகுதிகளைச் சேர்த்தும் உரையாற்றினார். உயர்ந்த மரபுகள், மக்களாட்சித் தத்துவத்தின் அடிநாதமாக மற்றும் விதையாக விளங்கும் நூறாண்டு வர லாற்றுப் பெருமை கொண்ட நமது சட்டமன்றப் பேரவையின் கண்ணி யத்தை, புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இதனால் முதலமைச்சர் அன்றைக்கு கொண்டு வந்த தீர்மானம் ஆளுநருக்கு புரிந் திருக்காது என்றார். ஆளுநர் வெளியேறுவதன் நோக்கம் என்ன? முந்தைய ஆண்டுகள் போல் இம்முறையும் உரையை முழுமை யாக படிக்காமல் ஆளுநர் சென்றுள் ளார். ஆளுநர் உரையின் தொடக்கத் தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரை யின் இறுதியில் தேசிய கீதம் இசைக் கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுந ருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறியுள்ளார் . இதன் மூலம் அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது கேள்விக்குறியாகிறது. நமது நாட்டின் மீதும், தேசிய கீதத்தின் மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும், இந்தப் பேரவை உறுப்பினர்களும் என்றென் றும் கொண்டுள்ளார்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டுப் பற்றிலும் தேசத் தலைவர்கள் மீதும் என்றும் மாறாத நன் மதிப்பைக் கொண்டது இந்த அரசு என்றும் கூறினார். தீர்மானம் இதைத் தொடர்ந்து, தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதில், தமிழ்நாடு அரசால் விதிகளின்படி அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரை யைப் படிக்காமல் சென்றுவிட்டார். ஆளுநருக்கு அனுப்பி வைக்கப் பட்ட உரை அச்சிடப்பட்டு உறுப்பி னர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.எனவே, இந்தியாவில் உள்ள பிற சட்டமன்றங்களில் மட்டுமல்ல உலக அளவில் உள்ள சட்டப்பேரவை களுக்கும் எடுத்துக்காட்டாகவும் நூற்றாண்டு வரலாற்று பெருமை கொண்ட இந்த பேரவையின் மக்க ளாட்சி மாண்புகளை உயர்த்திப் பிடிக்க வும், மரபைக் காத்திடவும் அச்சிடப் பட்ட ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார். பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.