மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசிய அமைச்சருக்கு கண்டனம்
மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம்
அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசி யதை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இதுகுறித்து மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநில பொதுச் செய லாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழகத் தில் உள்ள சில கட்சிகளை விமர்சிக்கும் போது அவற்றை “நொண்டி, கூன், குருடு போன்ற கட்சிகள்” என்ற வார்த்தை களை பயன்படுத்தி நையாண்டி செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள மூத்த அரசியல்வாதியும், அமைச்சரு மான துரைமுருகன் அவர்களே, இவ்வாறு பேசியிருப்பது மாற்றுத்திற னாளிகள் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கலைஞர் கருணாநிதி, தமிழக முதல்வராக இருந்த காலத்தில்தான் ஊனமுற்றவர்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊனமுற்றோர் என்ற சொல்லை தவிர்த்து, மாற்றுத்திற னாளிகள் என குறிப்பிட்டார். அத்தோடு, அத்துறையின் பெயரையும் மாற்றுத் திறனாளிகள் துறை என மாற்றினார். மேலும், அத்துறைக்கு அவரே பொறுப் பான அமைச்சராகவும் இருந்தார். அதே போன்று, தற்போதும் திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் துறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பாக உள்ளார். இந்நிலையில், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், அமைச்சருமான துரைமுருகன் சற்றும் யோசிக்கா மல், சட்டவிரோதமாக மாற்றுத்திற னாளிகளின் ஊனத்தை குறிப்பிட்டு அரசியல் நையாண்டி செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பல்வேறு விதமான சித்ரவதை களையும், கொடுமைகளையும் அனு பவித்து வரும் எண்ணற்ற மாற்றுத்திற னாளிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல், மாற்றுத் திறனாளிகளின் ஊனத்தை குறிப்பிட்டு இழிவுபடுத்தி, புண்படுத்தி பேசிய மைக்கு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பொதுவெளியில் உடனடி யாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.