புதுதில்லி, டிச.5- மும்மொழிக்கொள்கையுடன் தேசியக் கல்விக் கொள்கை அமல் படுத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நட ராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், மும்மொழிக் கொள்கையுடன் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் அரசு உறு தியுடன் இருப்பது உண்மையா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், மும்மொழிக் கொள்கை அமல்படுத்தும் விதம் என்ன என்றும், இந்தி/சமஸ்கிருதம் மும்மொழிகளில் ஒன்றாகக் கட்டாயமாகத் திணிக்கப்படுமா என்றும் ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான், கூறியதாவது:
“தேசியக் கல்விக் கொள்கையின் 4.13ஆவது பத்தி கீழ்க்கண்ட வாறு கூறுகிறது: “அரசமைப்புச்சட்டத்தின் ஷரத்துக்கள், மக்கள், மாநிலங் கள் மற்றும் ஒன்றியஅரசின் அபிலாசைகள், பலமொழிகளை யும் நாட்டின்ஒற்றுமையையும் மேம்படுத்த வேண்டியதற்கான தேவை, ஆகியவற்றைக்கணக்கில் எடுத்துக்கொண்டு மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படு வதற்கான நடவடிக்கைகள் தொடரும். குழந்தைகள் படிக்கும் மூன்று மொழிகள் எவை என்பதை அந்தந்த மாநிலங்கள் தீர்மானித்திடும்.
இவற்றில் இரண்டு அப்பகுதியில் பேசப் படும் மொழியாக இருந்திடும்.குழந்தைகள் இதில் ஒன்று அல்லது இரண்டு மொழிகளை மாற்றிக்கொள்ள விரும்பினால் அதற்கு 6 அல் லது 7 ஆம் வகுப்புகளில் மாற்றித்தரப்படும். மேற்படி கொள்கை 4.12 ஆவது பத்தியில் மொழி ஆசிரியர்களைப் பெரிய எண்ணிக்கை யில் நியமித்திட ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் முதலீடுகள் செய்யும். குறிப்பாக அரசமைப்புச்சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் கண்டுள்ள மொழிகள் தொடர்பான ஆசிரியர்களை நியமித்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இந்தி/சமஸ்கிருதம் திணிக்கப்படும் முன்மொழிவு எதுவும் பரிசீலனையில் இல்லை.” இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார். (ந.நி.)