சென்னை, அக். 31- தமிழ்நாட்டில் நான்கு நாட்க ளுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:- இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் தீபாவளி வரை நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும். வருகிற 2 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக் கோட்டை, ராமநாதபுரம், திரு நெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும். கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப் புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும். 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கன்னி யாகுமரி, திருநெல்வேலி, தூத் துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலு டன் கூடிய கனமழையும் பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பா லான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய் யக்கூடும். பரங்கிப்பேட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நன்னிலம், திரு வாரூர், மணமேல்குடி, தலா 5 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.
எச்சரிக்கை
குமரிக்கடல், மன்னார் வளை குடா மற்றும் இலங்கை கடற் பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீன வர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.