tamilnadu

ஜனவரி 19 தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவு நாள்

ஜனவரி 19 தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவு நாள் சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் திருவொற்றியூரில் அனுசரிக்கப்பட்டது. கே.ஆர்.முத்துசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில். மாநில துணை பொதுச்செயலாளர் வி.குமார், மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், பொருளாளர் வி.குப்புசாமி, பால்மர்லாரி சங்க செயலாளர் கருணாநிதி, பவுண்டரி தொழிற்சங்க செயலாளர் தனுஷ்கோடி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பாக்கியம், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர்.

ஜனவரி 19 தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோரின் நினைவு நாள் சிஐடியு வடசென்னை மாவட்டக்குழு சார்பில் அம்பத்தூரில் மாவட்ட துணைச் செயலாளர் பி.என்.உண்ணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் சு.லெனின்சுந்தர், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், நிர்வாகிகள் ரமணி, நிர்மலா ஆகியோர் பேசினர். 

கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்  மற்றும்  அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை தலைமையில் சென்னையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

;