சென்னை, ஏப். 25- ஓசிஎப் ஒர்க்கர்ஸ் யூனியன், அனைத்திந்திய பாதுகாப்பு துறை ஊழியர் கூட்டமைப்பின் வைர விழாவையொட்டி “இந்திய நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் செயல் தலைவர் என்.ஜெ.ராமன் தலைமையில் ஞாயிறன்று (ஏப். 24) ஆவடியில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் அறிமுக உரையாற்றினார்.
சு.வெங்கடேசன் எம்.பி.,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகை யில், நாடாளுமன்றத்திற்கு அரசியல் சாசன மும் அளித்திருக்கும் விளக்கமும், மாண்புகளும், நெறிகளும், விதிகளும் முன்னோர்கள் அணு அணுவாய் செதுக்கிய சிற்பங்கள். நாடாளுமன்றத் தின், மாநிலங்களவையின் மையப்பகுதியில் ஒரு உறுப்பினர் போய் குரல் கொடுத்தாலும் அந்த குர லுக்கு மதிப்பளிக்க வேண்டும். தற்போதைய மக்களவையில் எதிர்க்கட்சிகள் இருக்கையில் அமர்ந்த நேரத்தை விட அந்த மையப் பகுதியில் இருந்து முழக்கங்கள் எழுப்பிய நேரம்தான் அதிகம். ஆனால் எதையும் இந்த அரசு செவி மடுத்து கேட்கவில்லை என்று சாடினார். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முதல் கூட்டத்தொடரின் போது, பிரதமர் மோடி செய்தி யாளர்களை சந்திக்கிறார். அப்போது வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து விட்டு, எதிர்க்கட்சிகளின் என்ன கேள்விக்கும் விளக்கமளிக்கவும், எல்லா விவாதத்திற்கும் நாங்கள் தயார் எனத் தெரிவிக்கிறார். ஆனால் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் வேளாண் அமைச்சர் வேளாண் மசோதா குறித்து ஒரு பக்க அறிக்கையை வாசிக்கிறார். எந்த விவாதமும் இல்லாமல் வேளாண் சட்டம் வாபஸ் என்று கூறி நிறைவேற்றுகிறார்கள். எல்லா விவாதத்திற் கும் தயார் எனக் கூறிவிட்டு எந்த விவாதமும் இன்றி அந்த மசோதா நிறைவேற்றப்படுகிறது. மக்களவைதான் நாட்டின் உயர்ந்த ஜனநாயக அமைப்பு. அங்கு எதையும் விவாதிப்பதற்கான அனுமதி இவர்களது ஆட்சியில் கிடையாது. இன்றுவரை பிரதமர் மோடி உறுப்பினர்களின் கேள்விகளை செவிமடுத்து கேட்டதில்லை, அதற்கு பதிலளித்ததும் இல்லை. உலகத்தி லேயே 4 நிமிடத்தில் 15 சட்டங்களை நிறைவேற்றி யுள்ள ஒரு அவை என்றால் அது இந்திய மக்க ளவைதான். 130 கோடி மக்களின் வாழ்வியலை, உரிமைகளை தீர்மானிக்கிற, இவ்வளவு பெரிய விதிகளை ஒரு நிமிட விவாதம் கூட இல்லாமல் நிறைவேற்றும் அவையாக நாடாளுமன்றம் உள் ளது என்றும் சு.வெங்கடேசன் கவலை தெரிவித்தார்.
“என்னிடம் அளிக்கப்பட்ட ஒரு மசோதா வில் ஆங்கிலத்தில் இளங்கலை என்றும், இந்தி யில் முதுகலை பட்டதாரி என்று இருந்தது. எனக்கு இந்தி தெரியாது, என் நண்பர் கூறிய பிறகு தான் இப்படி வந்துள்ளது தெரியவந்தது. இப்படிப் பட்ட மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்றி யிருக்கிறது. கடந்த 20 வருடத்தில் 116 முறை மசோ தாக்கள் நிலைக்குழுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் 17ஆவது மக்களவையில் ஒரே ஒரு மசோதா மட்டும்தான் நிலைக்குழுவுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அதிகாரம் இருந்தால் எதையும் செய்யலாமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “மசோதாக்களை 7 நாட்களுக்கு முன்பு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் தற்போது கூட்டம் துவங்குவதற்கு முன்புதான் வழங்குகிறார்கள். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிகாரத்தை பறிக்கும் மசோதாவை அமித்ஷா முன்மொழிந்து கொண்டிருக்கும் வரை உறுப்பின ர்களுக்கு வழங்கப்படவில்லை. மிகபெரிய ஒரு மாநிலத்தை இரண்டாக பிரித்து, அதன் உரிமை யை, சிறப்பு அந்தஸ்தை பறித்து, ஒரு பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதைவிட மிக மோசமான ஜனநாயகப் படுகொலை எது வும் கிடையாது. ஒரு மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் இல்லாமல், அனுமதி இல்லாமல் அந்த பிரிவுக்குள்ளேயே செல்ல முடியாது, மாநி லத்தை பிரிக்க முடியாது என்று அரசியல் சாச னம் கூறுகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
டி.கே.எஸ்.இளங்கோவன்
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ஆட்சியாளர்களுக்கு சொந்தமானதல்ல நாடாளு மன்றம். அது உறுப்பினர்களுக்கு சொந்தமா னது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட எந்த மக்களுடைய பிரச்சனைகள் குறித்தும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிப்ப தில்லை. விதிகள் அனுமதிக்கும் உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. நம் நாட்டின் பாதுகாப்பு தேவைக்கேற்ப உற்பத்தி செய்யப்படுவதற் காகத்தான் துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற்சாலை, அவர்களுக்கு தேவையான உடைத் தொழிற்சாலை அரசால் துவங்கப் பட்டன. ஆனால் இவற்றை தனியாரிடம் ஒப்ப டைத்தால், அவர்கள் உற்பத்தி செய்யும் தளவாட பொருட்களை இந்திய அரசுக்கும் விற்பனை செய்வார்கள், பிற நாடுகளுக்கும் விற்பனை செய்வார்கள். அப்படியென்றால் நாட்டின் பாது காப்பு என்னவாகும்? என கேள்வி எழுப்பினார்.
திருநாவுக்கரசு
திருநாவுக்காரசு எம்.பி., பேசுகையில், நேரு காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் பெருகின. 100 கோடி ரூபாய் முதலீடு செய்தால் அன்று ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. இன்று ஆயிரம் கோடி முதலீடு செய்தால் 100 பேருக்குத்தான் வேலை கிடைக்கிறது. வேலை வாய்யப்பற்ற முதலீட்டால் என்ன பயன் என கேள்வி எழுப்பினார்.
கே.சுப்பராயன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்புராயன் பேசுகையில், கடந்த 8 ஆண்டுகளாக நாடாளுமன்றம் சிலுவையில் அறையப்பட்ட நிலையில்தான் உள்ளது. ஜனநாயக அரசியல் அமைப்புக்குள் இருந்து கொண்டே நாடாளுமன்ற ஜனநாய கத்தை சீரழிக்கும் பணியை பாஜக மேற்கொண்டு வருகிறது. மோடி கற்றுக் கொண்ட பாடம் ஆர்.எஸ்.எஸ்.சிடம். ஆர்.எஸ்.எஸ். கற்றுக்கொடுக்கும் முதல் பாடம் ஜனநாயக அரசியல் அமைப்பு இந்தியா விற்கு எதிரானது என்றுதான். அதனடிப்படை யில்தான் மோடி ஜனநாயகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங் களை 4 தொகுப்புகளாக மாற்றிவிட்டார்கள். எந்த கருத்தையும் முழுமையாக தெரிவிப்ப தற்கு அனுமதியில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கா லத்தில் கூட தொழிலாளர் உரிமைகள் இவ்வ ளவு மோசமாக பறிக்கப்பட்டதில்லை என்றார்.
பினோய் விஸ்வம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம் எம்.பி. பேசுகையில், இந்நிகழ்வில் அனைத்துக் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதால்தான். பெரும்பான்மையான மசோதாக்கள் விவா தத்திற்கு அனுமதிக்காமலே நிறைவேற்றப் படுகிறது. பிரதமர் மோடி ஒருநாள் கூட தொடர்ந்து 30 நிமிடம் நாடாளுமன்றத்தில் இருந்ததில்லை, எதற்கும் பதிலளித்ததும் இல்லை. கடந்த காலங்களில் 70 விழுக்காடு மசோதாக்கள் நிலைக்குழுக்கு அனுப்பப்படும். ஆனால் இப்போது எந்த மசோதாவும் அனுப்பப் படுவதில்லை. இது ஜனநாயகப் படுகொலை. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நாடாளுமன்ற விதிகளை நசுக்கிக் கொண்டி ருக்கிறார்கள் என்றார்.
தொழிலாளர்கள் இல்லை என்றால் முத லாளிகள் பூஜ்யம்தான். வெறும் பணத்தை வைத்துக் கொண்டு மட்டும் உற்பத்தி செய்து விட முடியாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சாதி, மதம், மொழி, இனங்களைக் கடந்து நாம் அனைவரும் ஒன்று பட்டு போராட முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். நிகழ்வில் சங்க நிர்வாகிகள் ஆர். ஜெயமூர்த்தி, ஏ.கலைச்செல்வன், எல்.ஐஸ்வர்யா, மனோஜ்குமார், பேரரசி, எம்.குமார், விஜய சீலன், முரளி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.