tamilnadu

மருத்துவத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு

திண்டுக்கல், மார்ச். 26 - பொது வேலை நிறுத்தத்தில் மருத்துவத் துறைத்துறை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவெடுத்துள்ளனர். தமிழ்நாடு மருத்து வத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநில செயற் குழுக் கூட்டம் சனிக்கிழமை யன்று (மார்ச் 26) திண்டுக் கல்லில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சீ.பிரபு ராம் தலைமையில் நடை பெற்றது. பொதுச் செயலாளர் இரா.ந.நம்பி ராஜன், பொருளாளர் சு.தங்க வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியா ளர்களிடம் நம்பிராஜன் கூறியதாவது: ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து மார்ச் 28,29 தேதிகளில் பொது வேலைநிறுத்தம் நடை பெறுகிறது. இதில், தமிழ் நாடு அரசில் பணியாற்றும் மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்கள் பங்கேற் கின்றனர். மருத்துவத் துறையில் 3 ஆயிரத்திற்கும் அதிக மான காலிப்பணியிடங்களை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். காலிப் பணியி டங்களை நிரப்பினால்தான் மக்களுக்கு சரியான மருத்துவம் சென்றடையும். தினம் தினம் புத்தம் புதிய திட்டங்கள் மருத்து வத்துறையில் அறிமுகப்ப டுத்தப்படுகிறது. அந்த திட்டங்களை நிறைவேற்ற புதிய பணி நியமனங்கள் உருவாக்கப்படுவதில்லை. எனவே புதிய நியமனங்கள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து நிலை பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்கிட அரசு முன்வரவேண்டும் என்பன உள்ளிட்ட 18  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நம்பிராஜன் தெரிவித்தார்.