திருநெல்வேலி, ஜன. 10- நெல்லையில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பிரஷிதா (வயது 24) நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார். இதற்காக பிரஷிதா மற்றும் அவரது குடும்பத்தினர் பாளை கே.டி.சி. நகர் இந்திரா நகரில் ஒரு வீட்டில் வாட கைக்கு குடியேறினர். அங்கிருந்து பிர ஷிதா தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை காலை அவரது அறை கதவு வெகுநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.
அவரது தாயார் அறை கதவை நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந் தனர். உடனே ஜன்னலை திறந்து பார்த்த போது அறைக்குள் தூக்கு போட்ட நிலையில் பிரஷிதா தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சத்தம் போட்டார். உடனே ராஜேந்திரன் அங்கு ஓடி வந்தார். பின்னர் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிரஷிதா தூக்கில் பிணமாக தொங்கி னார். இதனால் இதுகுறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக் காக பாளை. ஐகிரவுண்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரஷிதா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.