கொச்சி ஜனநாயகத்தை வலுப்படுத்து வதில் ஊடகங்கள் செலுத் தும் செல்வாக்கு மிக அதி கம் என்றும், அதில் ஊடகங்களின் நிலையை மேலும் வலுப்படுத்து வதே நான்காவது தூணின் வெளிப் பாடு என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஊடகங்கள் ஜனநாயகத்தை அதன் சாரத்தை உள்ளடக்கி பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் பாலாரிவட் டம் ரினை கொலோசியத்தில் நடை பெற்ற கேரள பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மாநா ட்டை தொடங்கி வைத்து பேசினார். அவரது உரையின் அம்சங்கள் வரு மாறு: சுதந்திரம், ஜனநாயகம் மற் றும் சிவில் உரிமைகளை உறுதி செய்து நாட்டுக்காக தியாகப் பணி களைச் செய்தவர்கள் ஆரம்ப கால ஊடகவியலாளர்கள். உண்மை யான பிரச்சனைகளை சமூகத்தின் மையத்திற்கு கொண்டு வந்து அதிகாரிகளுடன் பேசி தீர்த்து சமூ கத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் கடமை ஊடகங்களுக்கு உள்ளது.
விடுதலைப் போராட்டத்தில்
ஊடகங்களின் ஆரம்ப காலத் தையும் வளர்ச்சியையும் ஆரா ய்ந்தால் தேசிய சுதந்திரப் போரா ட்டத்தின் போது காந்திஜி உள் ளிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் என்ன செய்தார்கள். என்பதை ஆய்வு செய்தால் இவை புலப்படும். கட்டுப் பாடான எச்சரிக்கையான பத்தி ரிகை பாணியாக அது இருந்தது. கவனக்குறைவாக எதையும் எழுத மாட்டோம் என்றும், கோபத் தையோ, வெறுப்பையோ வெளிப் படுத்தவோ, உணர்ச்சிப் பெருக்குக் காகவோ பேனா அசைக்கப்பட மாட்டாது என்றும் அவர்களால் உறுதியளிக்கப்பட்டது.
டிஜிட்டல் யுகம்
ஊடகங்கள் இன்று மாற்றத்தின் பாதையில் செல்கின்றன. நாம் டிஜிட்டல் மீடியா யுகத்தில் வாழ் கிறோம். ஆக்மென்டல் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களின் உதவி யுடன், செய்தி சேனல்கள் செய்தி களின் அற்புதமான காட்சிகளைத் தயாரித்து வருகின்றன. பல மாற் றங்கள் ஏற்பட்டாலும் ஊடகப் பணி யின் அடிப்படை நெறிமுறைகள் மாறாமல் இருப்பதைப் பார்க்க வேண்டும். இதனடிப்படையில் சம கால ஊடகப் பணியின் நியாயமும் அநீதியும் ஆராயப்பட வேண்டும். ஒவ்வொரு செய்தியும் எவ்வ ளவு ஆழமாக அணுகப்படுகிறது; அது துல்லியமான விவரங்களுக்கு செல்கிறதா என்பதை ஊடக வல்லு நர்கள் சரிபார்க்க வேண்டும். எழுத் துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் திருத்திக் கொள் ளக்கூட நேரமில்லாத அளவுக்கு பிரேக்கிங் நியூஸ் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. விவாதம் மற்றும் உணர்ச்சிகளின் பின்னால் செல்லும் போது தகவல்கள் புறம் தள்ளப்படுகிறதா என்பதை மதிப் பீடு செய்ய வேண்டும்.
விமர்சனங்களைப் புறந்தள்ளாதீர்!
வளர்ச்சி மற்றும் நலச் செய்தி களை மலையாள ஊடகங்களில் பார்க்க முடியவில்லை என்ற குற் றச்சாட்டை மதிப்பிட வேண்டும். நம்பிக்கையான செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எல்லாமே விமர்சனமாக மாறும் போது ஏற்றுக்கொள்ள வேண்டி யதை புறக்கணிக்காதீர்கள். பத்தி ரிகையாளர்கள் விமர்சனத்துக்கு உள்ளாகிறார்கள் என்ற பார்வை யை அவர்களே மதிப்பீடு செய்ய வேண்டும். ஊடகங்கள் விமர்சிக் கப்படும் போதும், தவறுகள் சுட்டிக் காட்டப்படும் போதும் அவற்றை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். தனிமனித சுதந்திரம் கருத்துச் சுதந்திரத்தின் மீது ஊடுருவாமல் இருப்பதை உறுதி செய்வதே நியா யமான பத்திரிகை என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். பத்திரிகை ஒரு சர்ச்சைக்குரிய தொழிலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நமது சமூக-பொருளாதார மற்றும் அரசியல் துறையின் வளர்ச்சிகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தி, செயல்பாடுகளுக்கு தெளி வான வழிகாட்டுதலை அளிக்கக் கூடிய முடிவை இந்த மாநாட்டில் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் பத்திரிகையாளர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசு ஆரோக்கியமான அணுகுமுறை யை எடுத்து வருவதாகவும் முதல் வர் கூறினார். விழாவுக்கு, பத்திரிகையாளர் சங்கத் தலைவர் எம்.வி.வினிதா, பென்னி பஹானன் எம்.பி., டி.ஜே. வினோத் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் மனோஜ்முத் தேடன், டி.சி.சி. தலைவர் முக மது ஷியாஸ், சிபிஐ மாவட்டச் செய லர் கே.என்.தினகரன், பாஜக மாநி லக்குழு உறுப்பினர் சி.ஜி.ராஜ கோபால், ரைன் மெடிசின் நிர்வாக இயக்குநர் கியாஷ்னதாஸ் கேரள பத்திரிக்கையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கிரண் பாபு, பொருளாளர் சுரேஷ் வெள்ளி மங்கலம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.