tamilnadu

img

மல்யுத்த வீரர்களுக்கு நகராட்சி தலைவர் பாராட்டு

கள்ளக்குறிச்சி, மே 6- சென்னை சோழிங்க நல்லூரிலுள்ள முகமது சதக் கல்லூரியில் மாநில அளவிலான மல்யுத்த போட்டிகள் நடைபெற்றது.  21 வயதுக்கு உட்பட்ட வர்கள், 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் 18க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 21 வயதுக்குட்பட்ட வர்கள் பிரிவில் கள்ளக் குறிச்சி நகரை சேர்ந்த 22 மல்யுத்த வீரர்கள் கலந்து கொண்டு 2ஆவது இடத்தையும், 21 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் 3ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அணிகள் தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு தேர்வாகி யுள்ளனர். மாநில அளவில் சாதனை படைத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீரர்களை நகர்மன்ற தலைவர் சுப்பு ராயலு பாராட்டினார். உடன் தேசிய மல்யுத்த பயிற்சியாளர் சுரேஷ் இருந்தார்.