மே 20 அகில இந்திய வேலை நிறுத்தம், மறியல் விளக்க தெருமுனை பிரச்சாரம்
திருச்சிராப்பள்ளி, மே 11- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் மே 20 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் நடைபெறுகிறது. அதனை விளக்கி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சனிக்கிழமை திருச்சியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தொழிற்சங்க மாவட்டச் செயலாளர்கள் எல்.பி.எப் ராமலிங்கம், சிஐடியு ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, ஏ.ஐ.டி.யு.சி சுரேஷ், ஐ.என்.டி.யு.சி வெங்கட் நாரயணன், எல்.எல்.எப் விவேக் (எ) விடுதலை இன்பன், ஏ.ஐ.சி.சி.டி.யு தேசிகன், யு.டி.யு.சி சிவசெல்வம் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆட்டோ சங்க மணிகண்டன் நன்றி கூறினார்.
தஞ்சாவூரில் ஆதரவற்ற 22 உடல்கள் காவல்துறையினர் முன்னிலையில் அடக்கம்
தஞ்சாவூர், மே 11- தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 35 வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மைதானம், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் அந்தந்த பகுதியிலுள்ள பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. இதில், பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? பாதுகாப்பு, தீ தடுப்பு கருவி, முதலுதவி பெட்டி போன்றவை சரியாக உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூரில் 269 வாகனங்களும், கும்பகோணத்தில் 158 வாகனங்களும், பட்டுக்கோட்டையில் 245 வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில், தஞ்சாவூரில் 10 வாகனங்களுக்கும், கும்பகோணத்தில் 7 வாகனங்களுக்கும், பட்டுக்கோட்டையில் 18 வாகனங்களுக்கும் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ச. குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ப. ஜெய்சங்கர், முதன்மைக் கல்வி அலுவலர் இரா. அண்ணாதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.