பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி மிரட்டி பணம் பறித்த கொடூரன் காசி மற்றும் அவனது நண்பர்களின் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி மாதர் சங்கம் தக்கலை வட்டாரக் குழு சார்பில் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் குமாரி சுனந்தா தலைமை வகித்தார். வட்டாரக் குழு உறுப்பினர்கள் சுஜாஜாஸ்பின், ஸ்டெல்லா, சந்திரகலா, சரோஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.