சென்னை, மார்ச் 9 - தமிழகத்தில் சிசு, கருக்கொலை தொடர்ந்து நடைபெறுகிறது. அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா கூறியுள்ளார். அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம், சிஐடியு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்பு களின் தென்சென்னை மாவட் டக்குழுக்கள் சார்பில் புதனன்று (மார்ச் 9) கிண்டி யில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அலெக் சாண்ட்ரா கொலந்தாய் எழுதி, எழுத்தாளர் ச.லெனின் மொழிபெயர்ப்பில், பாரதி புத்தகாலயம் பதிப்பித் துள்ள ‘மகளிர் தினம் குறித்து’ எனும் நூல் வெளியி டப்பட்டது. நூலை சிகரம் ச.செந்தில்நாதன் வெளியிட, தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாவட்டத் தலைவர் டி.மோகனா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பேசிய எஸ்.வாலண்டினா, தொட்டில் குழந்தை திட்டம் செயல்ப டுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இத்திட்டத் திற்கான ஊழியர்கள் போதிய அளவில் இல்லை. இந்த திட்டம் முடங்கி இருக்கு மானால், அதனை அரசு மீண்டும்செயல்படுத்த வேண்டும் என்றார். விழாவிற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க பொதுச் செயலாளர் டி.டெய்சி, மாநிலச் செயலாளர் பி.சித்திரை செல்வி, தமுஎகச மாவட்டச் செயலாளர் பகத்சிங் கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சித்ரகலா, உழைக் கும் பெண்கள் ஒருங்கிணைப் ்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.சாந்தி உள்ளிட்டோர் பேசினர். பெருநகர சென்னை மாநகராட்சி 123ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி கவுரவிக்கப் பட்டார்.