tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கணித மேதை சீனிவாச இராமானுஜன்  105ஆவது நினைவு தினம்

கும்பகோணம், ஏப்.28-  உலக கணித மேதை சீனிவாச இராமானுஜன் 105 ஆவது நினைவு தினம், அவர் பயின்ற கும்பகோணம் நகர மேலேநிலைப்பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் ச. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில நிர்வாகியும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் பேராசிரியருமான முனைவர் வெ.சுகுமாரன் புகழுரை ஆற்றினார். ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரி முதல்வர் ரமேஷ், பள்ளி பழைய மாணவர் சங்கத் தலைவர் சி.நெடுஞ்செழியன், செயற்குழு உறுப்பினர் ஆர்.சீதாராமன், முதுகலை ஆசிரியர் கண்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கும்பகோணம் நகரச் செயலர் செந்தில்குமார் ஆகியோர் கணித மேதை இராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பேராவூரணி பேரூராட்சி  பகுதியில்  பூங்கா திறப்பு விழா

தஞ்சாவூர், ஏப்.28-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி 11 ஆவது வார்டு டாக்டர் அப்துல் கலாம் நகரில், அம்ரூத் 2.0 திட்டத்தின் (2023 - 2024) கீழ், ரூ.18 லட்சம் மதிப்பீட்டின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக் குமார் தலைமை வகித்து பூங்காவையும், கல்வெட்டையும் திறந்து வைத்து, பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா வரவேற்றார்.

குப்பைகளை பொது இடத்தில் கொட்டக் கூடாது:  விழிப்புணர்வு உறுதிமொழி

திருத்துறைப்பூண்டி, ஏப்.28-  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட நாடார் தெரு பைபாஸ் அருகில், ‘குப்பைகளை சுத்தம் செய்து பொது இடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது’ என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மீறி கொட்டினால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பதாகை வைத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்விற்கு, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல் பார்வையாளர்கள், நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு  உடல் பரிசோதனை முகாம்

பெரம்பலூர், ஏப்.28-  பெரம்பலூர் அருகே, பொம்மனப்பாடி, சத்திரமனை கிராமங்களில், தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் நடமாடும் மருத்துவக் குழுவினர், தொழிலாளர்களை தேடிச் சென்று உடல் முழு பரிசோதனை செய்யும் மருத்துவ முகாம் நடைபெற்றது.  முகாமினை தொழிலாளர் நல வாரிய  உதவி ஆணையர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார். மாவட்டக் கண்காணிப்பு குழு  உறுப்பினர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். டாக்டர் அரவிந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து  அவர்களுக்கு உடல் முழு பரிசோதனை செய்தனர். இதில் கட்டுமான தொழிலா ளர்கள் தங்களுடைய நலவாரிய அட்டை பதிவின்படி, பரிசோதனை செய்து கொண்ட னர். தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோ தனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை  வழங்கப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெற்றனர்.