tamilnadu

img

பெண்கள் மீதான சாதிய வன்கொடுமைகளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருநெல்வேலி, பிப்.2 - பெண்கள் மீதான சாதிய வன்கொடு மைகளை முற்றிலும் ஒழிக்க நட வடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தப்பட்டுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெண்கள் மீதான சாதிய வன்முறைகளுக்கு எதிராக மாநில சிறப்பு மாநாடு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை லூர்து  நாதன் சிலை அருகில் நடைபெற்றது. மாதர் சங்க மாநிலச் செயலாளர் பி. கற்பகம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், வரவேற்புக்குழு தலைவர் ஆர்.எஸ்.செண்பகம் வரவேற்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் நாகைமாலி, மாதர் சங்க அகில இந்திய  துணைத் தலைவர் பி.சுகந்தி, மாநில பொதுச் செயலாளர் அ. ராதிகா, மத்தியக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், ஆர். சசிகலா, மாநிலச் செயலாளர் கே.பாலபாரதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டில், சாதி ஆணவக் கொலை களுக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டங்களை  கட்டாயம் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் சாதிய வன்கொடுமைகளை முற்றிலும் ஒழிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அகில இந்திய துணைத் தலைவர்  சுகந்தி ஆற்றிய உரையில், “பெண்க ளின் கல்வி, சொத்துரிமை உள்ளிட்ட அடிப்பட உரிமைகளுக்காக தமிழ கத்தில் நீண்ட போராட்ட வரலாறு உண்டு. அதன் தொடர்ச்சியாகவே இன்றும் மாதர் சங்கம் பெண்களுக்கு எதிரான சாதிய வன்முறைகளை எதிர்த்துப் போராடி வருகிறது” என்றார். மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா, “வரும் பிப்.24 அன்று  தலைமைச் செயலகம் முன்பு பெண் களுக்கு எதிரான வன்முறை, சாதி ஆணவக் கொலைகள், மாணவர் களிடையே பரவும் போதைப்பொருள் பழக்கம் ஆகியவற்றுக்கு எதிராக போ ராட்டம் நடத்த உள்ளதாக” தெரிவித் தார். மாநாட்டில் மாதர் சங்க நிர்வாகி கள் மல்லிகா, உஷாபாசி, லட்சுமி, ராணி, பூமயில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் பொன். எழில் நன்றியுரை வழங்கினார்.