கோயம்புத்தூர், நவ.20 - ஈஷா யோகா மையத் திற்குள் நடைபெறும் கொடூ ரங்களை வெளிக்கொணர வேண்டும் என சூளுரைத்து நவ.21 (வியாழக்கிழமை) அன்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் தடை களை மீறி ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது.
ஒரு மர்ம தேசம்
கோவை ஆலந்தூரை யடுத்த இருட்டுப்பள்ளம் அருகே ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. போலிச் சாமியார் ஜக்கியின் ஈஷா மையத்தில் அடுத்த டுத்து நடைபெறும் மர்மச் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்ப டுத்தி வருகிறது. ஈஷா யோகா மையத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலி யல் அத்துமீறல், நில அபகரிப்பு, யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, விவசாய விளை நிலங்களை கையகப் படுத்துதல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்கள் இந்த மையத் தில் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.
அதிகார வர்க்கத்தின் ஆசிர்வாதம்
ஜனாதிபதி துவங்கி பிரதமர், ஆளுநர், அமைச்சர்கள் என இந்த மையத்திற்கு வரிசை கட்டி வருவதும், போலிச் சாமியார் ஜக்கியுடன் கை குலுக்குவதும் அன்றாட நடவ டிக்கையில் ஒன்றாக இருப்பதால், அநீதிகள் நடைபெறு கிறது என்பது உறுதியாக தெரிந்தும், சட்டம் தன் கடமையைச் செய்யாமல் கைகட்டி சேவகம் செய்து வருகிறது.
குற்றங்களின் வரலாறு
இந்நிலையில், அண்மையில் ஈஷா யோகா மையத்தின் மருத்துவர் ஒருவர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தில் கைதாகி சிறைசென்றதும், யோகா என்ற பெயரில் சிறு பிள்ளைகளை நிர்வாணப்படுத்தி வருவதாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழத் துவங்கியது.
நீதித்துறையின் தலையீடு
இந்நிலையில், நீதிமன்ற தலையீட்டிற்கு பிறகு, கோவை யில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதிர்ச்சி தகவல்கள்
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “ஈஷா மையத்திற்கு சென்ற 6 பேரை காணவில்லை மற்றும் மர்மமான முறையில் மரணம் நிகழ்ந்ததாக 7 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது (FIR). ஈஷா மையத்திற் குள் சட்டவிரோதமாக ஒரு சுடுகாடு இருக்கிறது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஈஷாவில் பணி புரியும் மருத்துவர் மீது 12 பழங்குடி பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போக்சோ வழக்கு உள்ளது. ஈஷா மையத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி தில்லி பெண் ஒரு வர், தில்லி காவல்நிலை யத்தில் புகார் அளித்தார்.
பழங்குடி மக்களின் இடங்கள் ஆக்கிரமிப்பு வழக்கு, யானை வழித்தடத்தில் அனுமதியின்றி ஈஷா மையத்தின் கட்டடங்கள் உள்ளன. மனப்பிறழ்வு (mood swings) பாதிப்படைந்தவர்கள் பலர் ஈஷா மை யத்தில் இருக்கின்றனர். ஈஷா யோகா மைய வளாகத் திற்குள் தகன மேடை ஒன்றும் உள்ளது. ஆன்மீக செயல் பாடு நடக்கும் இடத்தில் இது போன்றவை எதற்கு என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது” என விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது.
போராட்டத்தின் கோரிக்கை
இந்த பின்னணியில், ஈஷா யோகா மையத்தின் மீதான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் புலன் விசாரணை செய்திட, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமெனவும், இவ்வழக்கினை நேர்மையாகவும் துரிதமாகவும் விசாரித்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எதிர்ப்புகளை மீறி போராட்டம் இதன் ஒரு பகுதியாகவே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வியாழனன்று (நவ.21) ஆலந்தூரையடுத்த இருட்டுப்பள்ளம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்திருந்தது. இந்த போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஈஷா மையத்தினர் கங்கணம் கட்டி திரிகின்றனர். முதலில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் பெயரால் மிரட்டல் அறிக்கை விடுத்துப் பார்த்தனர். இதற்கு தக்க பதிலடியை மாதர் சங்கம் கொடுத்தது. இந்நிலையில், தற்போது காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியை மறுத்துள்ளது. எத்தனை தடை வந்தாலும் அதனை முறியடித்து முன்னேறுவோம் என்ற வேட்கையோடு மாதர் சங்கம் முடிவெடுத்துள்ளது.