சென்னை,டிச.23- தமிழ்நாடு பாடநூல் அச்சிடும் பணியை தமிழக அச்சக நிறுவனங் களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு பாடநூல் கழகம் மாண வர்களுக்கான பாடநூல்களை அச்சிட்டு வருகிறது. இந்த பாடநூல்கள் அச்சிடும் பணியை கடந்த அஇஅதிமுக ஆட்சியில் சர்வதேச டெண்டர் மூலம் வெளி மாநிலங்களுக்கு வழங்கியது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள புத்தகம் அச்சிடும் நிறுவனங்களும், பைண்டிங் செய்யும் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கொரோனா மற்றும் பொது முடக்கத்தால் தமிழகத்தின் அச்சுத் தொழில் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களில் பாடநூல் அச்சிடும் பணி அந்தந்த மாநில அச்சகங்களுக்கே வழங்கப்படும் போது, தமிழ்நாட்டில் மட்டும்தான் புத்தகங்கள் அச்சிடும் பணியில் பிற மாநில நிறுவனங்களும் பங்கேற்க முடியும் என்ற விதி உள்ளது. இந்த விதியை ரத்து செய்து தமிழ்நாடு பாடநூல் புத்தகங்களை அச்சடிக்கும் பணியை தமிழக நிறுவனங்களுக்கே வழங்க வேண்டுமென்று தமிழக அர சுக்கு புத்தகம் அச்சிடுவோர் மற்றும் பைண்டர்ஸ் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிடும் பாட நூல்கள் அச்சிடும் பணி அனைத்தையும் தமிழக அச்சக நிறுவனங்களுக்கே வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.