tamilnadu

மாற்றுத்திறனாளி உதவித்தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்

    டெல்டா மாவட்டங்களில் செங்கொடி ஏற்றப்பட்ட காலத்திலே இம்மாவட்டத்தின் பல கிராமங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது.  தொழிலாளர் உரிமைகளை பெற பல தொழிற் சங்க அமைப்புகள் உருவாக்கப்பட்டது.  குத்தகை விவசாயிகள் போரட்டம், கூலி தொழிலாளர்கள் போராட்டம், ஆலை தொழிலாளர் பிரச்சனை, முறைசாரா தொழிலாளர் பிரச்சனை, சமூக ஒடுக்குமுறைகளை எதிரித்து, காவல் நிலைய மரணங்களுக்கு நீதி கேட்டு, தீண்டாமை கொடுமைகளுக்கு களத்தில் பதிலடி போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை சந்தித்து சமரசமில்லாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்மாவட்டத்தில் போராடி வருகிறது.     அடிதட்டு மக்கள் அதிகமாக வாழும் மாவட்டம் இது. 2.5 லட்சம் குடிசை வீடுகள் நிறைந்த இம்மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை வெள்ளத்தால், இயற்கை சீற்றத்தால், மக்கள் மிகப் பெரும் துயரத்தை சந்திக்கின்ற நிலை உள்ளது.

    மழை வெள்ள காலங்களில் 50 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலக்கிறது.  8  மாவட்டங்களின் வடிகால் மாவட்டமாக இம்மாவட்டம் உள்ளது.  மாவட்டத்தில் வெள்ளாறு, கெடிலம், மணிமுத்தாறு, பரவலாறு, கொள்ளிடம், பெண்ணையாறு மற்றும் வீராணம், வெலிங்டன், பெருமாள் ஏரிகளும் 400க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகளும், குளங்களும் இம்மாவட்டத்தில் உள்ளது.  முறையாக தடுப்பனை கட்டி ஏரிகள், பாசன கால்வாய்கள் தூர்வாரி பராமரித்தால் இம்மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.     26 லட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டத்தில் சுகாதாரம் பெரும் பிரச்சினையாக உள்ளது.  துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை மக்கள் தொகைக்கேற்ப நவீனபடுத்த வேண்டும்.  போதிய டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டு மருத்துவ ஊழியர்கள் போதுமான அளவு இல்லாத நிலையில், மக்கள் உரிய சிகிச்சைக்கு வாய்ப்பிலாத நிலையில், புதிய நோய்களில் இருந்து காப்பாற்றி கொள்ள தனியார் மருத்துவனை செல்லும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகள் கொரோனா காலத்தில் அடித்த கொள்ளைகளை விலக்கிட தேவையில்லை.

    மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்த விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும். முறைசாரா முந்திரி தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க அவர்களுக்கு உரிய ஏற்பாட்டினை செய்திட வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை ஒன்றியங்களில் அமல்படுத்த வேண்டும். வேலை நாட்கள், கூலி அதிகரிக்க தொடர் கண்கானிப்பு வேண்டும். மேலும் கைத்தறி தொழிலை பாதுகாக்க, சிறுபான்மை மக்களின் நலனை பாதுகாக்க, உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க. குடிசை வீடுகள் கணக்கெடுத்து கான்கீரிட் வீடு கட்டி கொடுக்க, இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை புணரமைக்க, சுற்றுசூழல் பாதுகாக்க, மீனவர்கள் வாழ்வுரிமையை பாது காக்க, புதிய கல்வி நிலையங்கள் ஏற்படுத்திட வேண்டும்.      மேலும் வனத்துறைக்கு சொந்தமான 25,000 ஏக்கர் முந்திரி நிலங்களை நில மற்றவர்களுக்கு வழங்கிட ஆவண செய்திட வேண்டும். மாவட்டத்தில் சேதம் அடைந்துள்ள சாலைகளை சீர்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன போன்ற மாவட்ட மக்களின் நலன்களை வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர் மாவட்ட 23வது மாநாடு வடலூரில் நடைபெறுகிறது.  மக்கள் நலன் காக்க நடைபெறும் மாநாட்டில் நிறைவேற்றும் தீர்மானங்களை எதிர்கால அறைகூவலை வெற்றிபெற அணிதிரள்வோம் - ஒன்றுபடுவோம் - போராடுவோம்.